செய்திகள் :

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

post image

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்தில் வாகன பழுப்பார்க்கும் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்.13 அன்று நள்ளிரவு அவர்களது கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையின் உரிமையாளர் தில்ஷாத், அவரது மகனான நயீம், ஜாஃபர், தானிஷ் மற்றும் நசீர் உள்ளிட்ட 8 தொழிலாளர்களின் கைகள் மற்றும் கால்களைக் கயிற்றால் கட்டிபோட்டு அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த ஈரான் தூதரகம், தீவிரவாதம் நீண்ட நாளாக நிலைபெற்றுள்ள ஒரு நோய், அது என்றுமே நாட்டுக்கு அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானிலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஸஹேதான் நகரத்திலிருந்து கொண்டு செல்லப்படும் முன்னர் பலியான பாகிஸ்தானியர்களின் உடல்களுக்கு ஸ்ஹேதான் மாகாண மேயர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மரியாதைச் செலுத்தினர்.

பின்னர், பாகிஸ்தானின் பஹாவால்பூர் விமான நிலையத்திற்கு நேற்று (ஏப்.17) வந்தடைந்த அவர்களது உடல்கள் அங்கிருந்து சாலை வழியாக அவர்களது சொந்த ஊரான அஹ்மதுபூர் ஷர்கியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் யாரென இதுவரை தெரியவராத நிலையில் ஈரானில் பதுங்கியுள்ள பலூசிஸ்தான் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிக்க:கடந்த 96 ஆண்டுகளாக ஒரு குழந்தைகூட பிறக்காத நாடு!

துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன்: மல்லை சத்யா

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுவதாக அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் ச... மேலும் பார்க்க

மல்லை சத்யா வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றேன்: துரை வைகோ

சென்னை: இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என மல்லை சத்யா கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன் என துரை வைகோ தெரிவித்தார். மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்... மேலும் பார்க்க

மேல்பாதி திரெளபதி அம்மன் வழிபாடு: ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சிபிஎம் வேண்டுகோள்!

சென்னை: திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தில், ஆதிக்க சக்திகளை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளாா்.விழுப்புரம் மாவட்டம், ம... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: எம்.ஏ.பேபி விமா்சனம்

சென்னை: அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா்.முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ண... மேலும் பார்க்க

ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவைகளை எந்தெந்த நேரங்களில் இயக்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க