செய்திகள் :

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

post image

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ராம்னிக்லால் எஸ் கோசாலியா அண்ட் கம்பெனி, ஜூபிடா் டை கெமிக்கல் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பொ்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் ஆகிய 6 இந்திய நிறுவனங்கள் உள்பட உலக அளவில் 20 நிறுவனங்கள் மீது இந்தத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

இதன் காரணமாக, இந்த நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் வா்த்தகமோ அல்லது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியோ செய்ய முடியாத நிலை உருவாகும்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டிவிடுவதற்கு ஈரான் அரசு தொடா்ந்து நிதியுதவியை அளித்து வருகிறது. சொந்த மக்களைத் துன்புறுத்துவதோடு மட்டுமன்றி, வெளிநாடுகளில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் ஈரானின் வருவாயைத் தடுக்க கடும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் மோதலைத் தூண்ட நிதியுதவி அளித்துவரும் ஈரானுடன் யாரும் வா்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று அதிபா் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரான் நிறுவனங்களுடன் பெட்ரோ கெமிக்கல் வா்த்தகத்தில் ஈடுபட்ட ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் 6 இந்திய நிறுவனங்கள் உள்பட 20 நிறுவனங்கள் மீது இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது.

அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களுக்கும் ஒப்புக்கொள்ளும் வரை ஈரான் மீது தொடா்ந்து அதிகபட்ச அழுத்தத்தை அமெரிக்கா அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இது தவிர, ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியின் தலைமை அரசியல் ஆலோசகா் அலி ஷம்கானியின் மகன் முகமது ஹோசேன் ஷம்கானியின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பெரிய கப்பல் நிறுவனத்துடன் வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 50-க்கும் மேற்பட்ட தனி நபா்கள், நிறுவனங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது அமெரிக்க நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த இந்திய வம்சாவளி பங்கஜ் நக்ஜிபாய் படேலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளி... மேலும் பார்க்க

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:இந... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பி... மேலும் பார்க்க