செய்திகள் :

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது: சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் - டிரம்ப் எச்சரிக்கை!

post image

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் கமேனி பதுங்கியிருக்குமிடம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருக்கும் நிலையில், அவரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

கமேனி சரணடைந்துவிட்டால் பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று டிரம்ப் எண்ணுகிறார்.

இதுகுறித்து டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது: ஈரானின் உச்சபட்ச தலைவராக அறியப்படுபவரைக் கொல்ல இப்போதைக்கு திட்டம் தீட்டவில்லை. அவர் பதுங்கியிருக்குமிடம் எங்களுக்கு தெரியும். இந்த நிலையில், அவர் சரணடைவதே சிறந்த தீர்வு என்றும் டிரம்ப் சொல்லியிருக்கிறார்.

எனினும், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து கமேனி சரணடைவாரா என்பது கேள்விக்குறியே.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?

பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரைத் தொடர்ந்து, தற்போது மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும்... மேலும் பார்க்க

தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!

ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கச்சா எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை இஸ்ரேல் குறிவத்து தாக்கி வருகிறது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.இந்தப் படுகொ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக பெருமளவிலான மக்கள் வந்து குடியேறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ந... மேலும் பார்க்க