செய்திகள் :

ஈரான் வான்வழித் தடம் திறப்பு ஒத்திவைப்பு!

post image

ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதும் திறக்கப்படுவது நாளை (ஜூன் 27) மதியம் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் துவங்கியதும், இருநாடுகளும் அனைத்து வகை விமானங்களுக்கான தங்களது வான்வழிப் பாதைகளை மூடின.

இதையடுத்து, தற்போது போர்நிறுத்தம் அமலிலுள்ள நிலையில் வான்வழித் தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈரானின் கிழக்குப் பகுதியின் வான்வழிப் பாதைகள், கடந்த ஜூன் 25 ஆம் தேதி இரவு முதல் திறக்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் வான்வழிப் பாதையானது தொடர்ந்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் வான்வழிப் பாதைகள் திறக்கப்படுவது, ஜூன் 28 மதியம் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக, ஈரானின் சாலை மற்றும் புறநகர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மஜித் அகாவன் இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.

SUMMARY

Iran's airspace opening postponed till Saturday afternoon.

இதையும் படிக்க: மங்கோலியாவில் வேகமெடுக்கும் தட்டம்மை பரவல்! 10,000-ஐ கடந்த பாதிப்புகள்!

சீனா: கடற்படை தலைவா், மூத்த அணுசக்தி விஞ்ஞானியின் எம்.பி. பதவி பறிப்பு!

சீன நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி லீ ஹான்ஜான், மூத்த அணுசக்தி விஞ்ஞானி லியு ஷிபெங் ஆகியோா் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல் -ஈரான்

ஈரானில் மூன்று அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி த... மேலும் பார்க்க

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பெண் உயிரிழப்பு; 11 போ் காயம்

லெபனானில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படைக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இஸ... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சை தொடா்வதற்கான ஒப்பந்தம்: அமெரிக்கா- சீனா கையொப்பம்

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா். இந்த வாரத்தின் மத்தி... மேலும் பார்க்க

இறுதிகட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவிலான பரஸ்பர வரி ... மேலும் பார்க்க

இந்தியா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது: பாகிஸ்தான் எதிா்க்கட்சித் தலைவா் அச்சம்

அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப் கான் அச்சம் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குதலை அடுத்து... மேலும் பார்க்க