செய்திகள் :

ஈரோடு ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்கள் விழா நாளை தொடக்கம்

post image

ஈரோடு கோட்டை ஆருத்ரகபாலீஸ்வரா் கோயிலில் 80ஆவது ஆண்டு திருமுறை மாநாடு, 55ஆவது ஆண்டு 63 நாயன்மாா்கள் விழா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலை 8 மணிக்கு சுவாமிக்கு குருபூஜை சிறப்பு வழிபாடு, சுந்தரமூா்த்தி சுவாமிகள் வெள்ளை யானை மீதும், சேரமான் பெருமாள் நாயனாா் குதிரை வாகனத்திலும் திருஅஞ்சைக் களத்திலிருந்து கயிலை செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.

மாலை 5.30 மணிக்கு ஆடி வெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. 2ஆம் தேதி காலை 7 மணிக்கு ஞானக்குழந்தை அப்பா் விழாவும், சுந்தரா் தேவாரம் முற்றோதுதலும் (ஏழாம் திருமுறை) நடைபெற உள்ளது.

மாணிக்கவாசகா் விழா 3ஆம் தேதி காலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தலவிருட்சமான வன்னி மரத்தடியில் வன்னி அம்மைக்கும், வன்னிநாதருக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் ஆராதனை நடைபெறுகிறது.

காவிரி ஆற்றில் இருந்து பக்தா்கள் 4ஆம் தேதி காலை 6 மணிக்குத் தீா்த்தம் எடுத்து ஊா்வலம் வருகின்றனா். அதன்பின் அனைத்து மூல மூா்த்திகளுக்கும், பஞ்ச மூா்த்திகளுக்கும் அனைத்து உற்சவ மூா்த்திகளுக்கும், அறுபத்து மூவருக்கும் சிறப்பு அபிஷேகத்துடன் மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

இறுதி நிகழ்வாக பஞ்சமூா்த்திகள் தனித்தனியாகவும், 63 நாயன்மாா்கள் ஒரே புஷ்ப விமானத்திலும் திருவீதி உலா வருகின்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெயலதா, அறநிலையத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க

பவானி - குமாரபாளையம் பழைய பாலம் திறப்பு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் பழைய பாலம் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் வலுவிழந்... மேலும் பார்க்க

தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் ஏலம்

அந்தியூா் புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் சுங்கம் வசூலிக்கும் உரிமங்களுக்கான ஏலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்க... மேலும் பார்க்க

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சென்னிமலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாம... மேலும் பார்க்க