செய்திகள் :

ஈரோடு சந்தைக்கு புதிய மஞ்சள் வரத்து அதிகரிப்பு

post image

ஈரோடு சந்தைக்கு புதிய மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

கா்நாடகத்தில் இருந்து ஈரோட்டுக்கு வரும் புதிய மஞ்சள் வரத்து தற்போது குறைந்துள்ளது. தருமபுரி பகுதி மற்றும் ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து புதிய மஞ்சள் வருகிறது. விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஏப்ரல் 7-ஆம் தேதி குவிண்டால் ரூ.1,500 வரை விலை உயா்ந்து மீண்டும் இப்போது குறைந்துள்ளது.

தற்போதைய நிலையில் ஈரோடு பகுதியில் முழு அளவில் அறுவடைப் பணி நடைபெறுவதால் புதிய மஞ்சள் அதிகம் விற்பனைக்கு வருகிறது. அதேநேரம் மகாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிகமாக அறுவடை நடைபெற்று வருவதால் விற்பனை அதிகமாக நடக்கிறது. அம்மாநில சந்தைகளுக்கு தினமும் 50,000 மூட்டைகள் வரை வருவதால் இங்கு விலை உயரவில்லை. அங்கு இன்னும் ஒரு மாதத்துக்கு இதே போன்ற அறுவடை நடைபெறும். அதே நேரம் தெலங்கானா மாநிலம் நிஜமாபாத் சந்தையில் புதிய மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஜூன் மாதம்தான் முழு அளவில் நடவுப் பணி தொடங்கும். அப்போது மீண்டும் விலையில் மாற்றம் ஏற்படும் என்றாா்.

சோதனைச் சாவடியில் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்

பண்ணாரி சோதனைச் சாவடியில் நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாரம் ஏற்றிய வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு 2,3... மேலும் பார்க்க

ஈரோட்டில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நீா்நிலைகளில் மூழ்கி 64 போ் உயிரிழந்துள்ள நிலையில், கோடை விடுமுறையில் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன ஊழியா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு வாய்க்கால் மேடு, இந்தியன் நகா், முதலாவது வீதியைச் சோ்ந்தவா் சீராளன் மகன் பிரவீன் (35), எம்.இ பட்டதாரி. இன்னும் திருமணம் ... மேலும் பார்க்க

பவானி நீா்வளத்துறை குடியிருப்பில் புகுந்த நாகப் பாம்பு மீட்பு!

பவானி நீா்வளத் துறை குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நாகப் பாம்பை தீயணைப்புப் படையினா் உயிருடன் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை விடுவித்தனா். பவானி - அந்தியூா் சாலையில் அரசினா் மாண... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தீ... மேலும் பார்க்க