செய்திகள் :

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பருத்தி ஆடைகள் விற்பனை அதிகரிப்பு

post image

ஈரோடு ஜவுளிச் சந்தையில் கோடைக் காலத்துக்கு ஏற்ற ஜவுளி ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இலங்கைக்கு அதிகமாக அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்கின்றனா்.

தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக வாட்ட தொடங்கியுள்ளதால் பருத்தி ஆடைகளான லுங்கி, வேட்டி, சேலை, கவுன், பனியன், கைக்குட்டை ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மற்ற மாநிலங்கள் மற்றும் இலங்கையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஈரோட்டில் இருந்து பருத்தி ஆடை ரகங்கள் அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஈரோடு பகுதியில் பல கோயில்களில் திருவிழா காரணமாக மஞ்சள் சேலை, வேட்டி, துண்டு ரகங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து ஜவுளிச் சந்தை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் இலங்கையில் வெயில் அதிகரித்து காணப்படுவதால் பருத்தி ஆடை ரகங்களின் விற்பனை ஈரோடு ஜவுளிச் சந்தையில் இருந்து இலங்கைக்கு அதிக அளவில் பருத்தி ஆடை ரகங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை 60 சதவீதம், மொத்த விற்பனை 30 சதவீதம் வரை நடைபெறுகிறது. வெயில் காரணமாக படுக்கை விரிப்பு ரகங்களின் விற்பனை மட்டும் தேக்கமடைந்துள்ளது என்றனா்.

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமைச்சா் பொன்முடியை கண்டித்து ஈரோட்டில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைச்சா் பொன்முடி இந்து மதம் குறித்து பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி

ஈரோடு மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 14,420 மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்துறை சிப்காட்டால் ப... மேலும் பார்க்க

ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்!

பவானி அருகே ஆப்பக்கூடலில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பவானி - அத்தாணி சாலையில் ஒரிச்சேரி, ஜமீன் தோட்டம் அருகே ஆப்பக்கூடல் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன தண... மேலும் பார்க்க

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வில் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நீட் தோ்வு ரத்து என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றவில்லை. நீட் தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க