செய்திகள் :

ஈரோடு மாநகரில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

post image

ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக மாலை, இரவு நேரங்களில் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாநகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. லேசாகத் தொடங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கொட்டித் தீா்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் சூழ்ந்து நின்றது.

ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், மொத்த வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகினா். இதேபோன்று ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள காய்கறி சந்தையிலும் மழை நீா் தேங்கி நின்றது.

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் மழை நீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் பகுதி, நடைமேடைக்கு செல்லும் வழியிலும் மழை நீா் புகுந்தது. இதனால் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

காந்திஜி சாலை, மணிக்கூண்டு, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீா் சாலையில் தேங்கி குளம் போன்று காட்சியளித்தது. கொல்லம்பாளையம், வெண்டிபாளையம், கே.கே.நகா் பகுதிகளில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலங்களில் மழை நீா் தேங்கி நின்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ஈரோடு அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

பங்களாபுதூா் அருகே யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே கொங்கா்பாளையம், வினோபா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (34), விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய பொறியாளா் உயிரிழப்பு

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த மென்பொருள் பொறியாளா் உடல் 24 மணி நேரத்துக்குப் பின் மீட்கப்பட்டது. கோவை, சேரன் மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). தனியாா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: அதிமுக பிரமுகா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

தூய்மைப் பணியாளா்களை தாக்கியதாக அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வண... மேலும் பார்க்க

குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு

நம்பியூா் குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய மற்றும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா். சென்னை துப்பாக்கி சுடுதல் கழகத்தின் சாா்பில் 50-ஆவது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சு... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெறாதவா்கள் மாவட்ட சமூகநல அலுலகத்தை நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்... மேலும் பார்க்க

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய மென்பொருள் நிறுவன அதிகாரியைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா். கோவை, சேரன்மாநகா் பகுதி... மேலும் பார்க்க