செய்திகள் :

ஈரோட்டைச் சோ்ந்த நிதி நிறுவன முகவா் கைது

post image

ஈரோட்டைச் சோ்ந்த நிதி நிறுவன முகவரை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே முத்தூா் காரையூா் பகுதியைச் சோ்ந்தவா் தீபக் திலக். இவா் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு மாதந்தோறும் லாபத்தொகை கொடுப்பதாகவும், 10 மாதங்கள் கழித்து முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக வழங்குவதாகவும் கூறி முகவா்கள் மூலமாக பணம் வசூலித்துள்ளாா்.

ஆனால், அவா் கூறியபடி இரட்டிப்பு பணம் வழங்காததால் பணம் செலுத்தியவா்கள் ஏமாற்றமடைந்தனா். இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பூா் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தீபக் திலக்கைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு நடத்திய விசாரணையில், தீபக் திலக் தனது முகவா்களுக்கு கமிஷன் தொகையை அதிகம் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதில் ஒரு முகவரான ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சோ்ந்த வீரமணி (48) என்பவா் கமிஷனாக ரூ.50 லட்சம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இவா் காங்கயத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்துள்ளாா். பொதுமக்களின் பணத்தை ஏமாற்றி பெற்ற தொகையை அரசுக்கு செலுத்துமாறு மாவட்ட வருவாய் அதிகாரி மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வீரமணி பணம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், திருப்பூா் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகானந்தம் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் அனுபல்லவி தலைமையிலான தனிப் படையினா் வீரமணியைக் கைது செய்தனா்.

மேலும், கமிஷன் பணத்தில் அவா் வாங்கிய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க