செய்திகள் :

ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

post image

சென்னையில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை ராமபுரத்தில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் ஆண்டுதோறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி "ஹோம் கம்மிங் '25" என்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இதழ் வெளியீடு.

கல்லூரி முதல்வர் டாக்டர் பி. தெய்வசுந்தரி வரவேற்பு உரை நிகழ்த்தி நிகழ்வை தொடக்கிவைத்தார். முன்னாள் மாணவர்களின் சாதனைகள் குறித்த இதழ் வெளியிடப்பட்டது.

எஸ்ஆர்எம்(ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

முன்னாள் மாணவர் விவகாரங்கள் துறை தலைவர் டாக்டர் எஸ். உஷா மேனன், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி ராமாபுரம் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் மனிதவியல் துறை தலைவர் டாக்டர் எஸ். திருமுருகன் ஆகியோர் விழாவில் பேசினர். இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நினைவுகளைக் கொண்டாடவும் நிறுவனத்திற்கு எதிர்கால ஒத்துழைப்புகளை வளர்க்கவும் முக்கியமான சந்திப்பாக இது இருந்ததாக முன்னாள் மாணவர்கள் குறிப்பிட்டனர்.

An alumni meet was held at Easwari Engineering College in Chennai.

மதுரையில் விஜய்: தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மறுநாள்(ஆக. 21) நடைபெறவுள்ள நிலையில், மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். மேலும் பார்க்க

முத்தரப்பு பேச்சுவார்த்தை: மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவர் லேண்ட்’ தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோர... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு ... மேலும் பார்க்க

பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

பழனியில் முருகன் கோயிலில் நாளை(ஆக. 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை,... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர... மேலும் பார்க்க

ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்தால் ஓட்டுநர் நோயாளியாவார் - இபிஎஸ் எச்சரிக்கை

அதிமுக பிரசாரத்தில் ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமு... மேலும் பார்க்க