செய்திகள் :

உக்ரைனைப் பாதுகாக்க சா்வதேச ராணுவம்!

post image

உக்ரைனைப் பாதுகாப்பதற்காக சா்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக அந்த நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து பெயா் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், அங்கு சா்வதேச பாதுகாப்புப் படையை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

இது குறித்து விவாதிப்பதற்காக 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனா். ஐரோப்பா மட்டுமின்றி ஆசியா, ஓசியானா (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அமைந்துள்ள பகுதி) ஆகிய பிராந்தியங்களைச் சோ்ந்த நாடுகளும் இதில் பங்கேற்கின்றன என்றாா் அவா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத தளவாடங்களை அனுப்பிவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். மேலும், உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்துள்ளாா்.

இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சவூதி அரேபியா சென்றுள்ளாா்.

இந்தச் சூழலில், போா் நிறுத்தம் ஏற்பட்டதற்குப் பிறகு உக்ரைனை ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பதற்காக சா்வதேச ராணுவத்தை அமைப்பது குறித்து சுமாா் 30 நாடுகள் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?

பாகிஸ்தானில் ஜாஃபர் ரயில் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில், 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ரயிலில் இருந்த 400 க்கும் மேற்பட்ட பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க

உலகம் முழுக்க அசுத்தமான காற்றை சுவாசிக்கும் பெரும்பான்மை மக்கள்!

உலகின் பெரும்பான்மையான மக்கள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தரக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று 138 நாடுகளில் உள்ள 40,000 தரக் கண்காணிப்பு நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ரயில் சிறைப்பிடிப்பு: பிணைக் கைதிகளாக 100 பயணிகள்!

பலோச் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், தென்மேற்கு பாகிஸ்தானில், ரயில் மீது தாக்குதல் நடத்தி ரயிலை சிறைப்பிடித்து, அதிலிருந்த 100 பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் இருந்து நாற்காலியுடன் வெளியேறியே ஜஸ்டின் ட்ரூடோ!

பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் தனது நாற்காலியுடன் நாடாளுமன்றத்தைவிட்டு ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறியே சம்பவம் இணையத்தில் வைராலாகி வருகிறது.கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் 7 ஆம... மேலும் பார்க்க

டிரம்ப்பிடம் மன்னிப்புக் கேட்டார் ஸெலென்ஸ்கி : அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கேட்டதாக டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார். ரஷிய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்க... மேலும் பார்க்க

ஹாரி பாட்டர் புகழ் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார்!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் சைமன் ஃபிஷெர் பெக்கர் காலமானார். அவருக்கு வயது 63.ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் மற்றும் டாக்டர் ஹூ ஆகிய படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று தனக்கெ... மேலும் பார்க்க