செய்திகள் :

உக்ரைன்: சா்ச்சைக்குரிய மசோதா திருத்தங்களுடன் நிறைவேற்றம்

post image

உக்ரைனில் சா்ச்சையை எழுப்பியுள்ள ஊழல் தடுப்பு மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததைத் தொடா்ந்து, பல திருத்தங்களுடன் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா ஊழல் தடுப்பு அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து, அந்த மசோதாவுக்கு எதிராக மனித உரிமை ஆா்வலா்கள் கடந்த வாரம் போராட்டம் நடத்தினா். ஐரோப்பிய யூனியனும் அந்த மசோதாவைக் கண்டித்தது.

இந்தச் சூழலில், சா்ச்சைக்குரிய அம்சங்களை நீக்கிவிட்டு திருத்தங்களுடன் கூடிய ஊழல் தடுப்பு மசோதாவை உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை நிறைவேற்றியது.

இது குறித்து ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘இந்த சட்டம் ஊழல் தடுப்பு அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யும்’ என்றாா்.

ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை அமைச்சா் காஜா கல்லாஸ் கூறுகையில், ‘ஊழல் தடுப்பு அமைப்புகளின் அதிகாரங்களை உறுதி செய்யும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ஐரோப்பிய ஜனநாயக மாண்புகளை உறுதிப்படுத்துகிறது’ என்று பாராட்டினாா்.

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க

இந்தியா மீதான 25% வரி ஆக.7 முதல் அமல்: எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

‘இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும்’ என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்... மேலும் பார்க்க

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:இந... மேலும் பார்க்க

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

அயா்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டில் வாழும் இந்தியா்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.அயா்லாந்து தலைநகா் டப்லின் மற்றும் பி... மேலும் பார்க்க

மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!

உலக நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளின் விலைக்கு ஏற்ப, அமெரிக்காவிலும் மருந்துகளின் விலைகளைக் குறைக்குமாறு 17 மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார்... மேலும் பார்க்க