செய்திகள் :

உக்ரைன்: ரஷிய டிரோன்களின் தாக்குதலில் குழந்தை உள்பட 3 பேர் பலி!

post image

உக்ரைன் மீது ரஷிய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது இன்று (மார்ச் 23) அதிகாலை ரஷியா டிரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். அதிகாலையில் சுமார் 5 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் சேதாரமானதுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கீவ் நகர ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் டினிப்ரோ மாவட்டத்திலுள்ள 2 குடியிருப்பு கட்டடங்களில் பற்றிய தீயினால் பெண் ஒருவரும், போடில் மாவட்டத்திலுள்ள 25 அடுக்கு மாடி கட்டடத்தின் 20 வது தளத்தில் ஏற்பட்ட தீயினால் மற்றொரு நபரும் பலியானதாக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் 2வது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

முன்னதாக, ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த தாக்குதலானது தற்போது நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்ததிற்காக உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் அமெரிக்க பிரதிநிதிகளை சந்திப்பார்கள் என உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், இந்த பேச்சு வார்த்தையில் உக்ரைனின் எரிசக்தி வசதிகள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்படும் நீண்ட தூர தாக்குதல்களை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க

ஊர் ஊராகச் சென்று மக்களைத் தாக்கும் ஒற்றை யானை! ஒரே நாளில் 4 பேர் பலி!

ஜார்க்கண்டு மாநிலத்தில் மதம் பிடித்த ஒற்றை யானையின் தாக்குதலில் 12 மணி நேரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். கும்லா மற்றும் சிம்டேகா ஆகிய மாவட்டங்களில் தனது கூட்டத்தை விட்டு பிரிந்ததாகக் கருதப்படும் காட்ட... மேலும் பார்க்க

திரைப்படம், நாடகம் மூலம் தீவிரவாதத்தை எதிர்க்கும் பாகிஸ்தான்!

தீவிரவாதத்தை திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் பொது மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர... மேலும் பார்க்க