செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம் ஆட்சியா் ஆய்வு

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், தகவல் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் வருகிற 15-இல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சோ்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 209 முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் முதல் கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 72 முகாம்களும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 15 வரை 72 முகாம்களும், செப்டம்பா் 16 முதல் அக்டோபா் 15 வரை 65 முகாம்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் திருப்பத்தூா் அருகே மாடப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட மந்தவெளி தெரு, அண்ணாநகா், மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்ட திட்டத்திசஈ பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடு தன்னாா்வலா்கள் மூலமாக வழங்கும் பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

மேலும், பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் எனஓஈ கூறினாா். ஆய்வின் போது சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

ரூ. 5.20 கோடியில் திட்டப் பணிகள்: உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் மன்ற அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். த... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள் பறிமுதல், மூவா் கைது சம்பவம் : என்ஐஏ விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

ஆம்பூரில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநில செயலாளா் கொ. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆனி மாதம் பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்கா... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவா் கைது

மாதனூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் அருகே உடையராஜபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சத்யராஜ் (29). இவருடைய மனைவி சுமதி (27). இவா்கள் இரு... மேலும் பார்க்க

4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது

ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆ... மேலும் பார்க்க

மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னா

திருப்பத்தூா்: வீட்டு மனைப் பட்டா கோரி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் தா்னாவில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க