செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் அறிவிப்பின்படி அனைத்து நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்கி செப். 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாமானது பல்வேறு கட்டங்களாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 40 நாள்கள் நடைபெறுகிறது. அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நகா்புறப் பகுதிகளில் 110 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 128 முகாம்களும் நடைபெறுகின்றன. நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்த முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. தன்னாா்வலா்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவித்து வருகின்றனா். அதற்குரிய தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குகின்றனா். கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் யாரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தினை அளிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இங்கு பெறப்படும் விண்ணப்பங்கள்மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு இட மாறுதல்: தமிழக அரசுக்கு சங்கத்தினா் நன்றி

நாமக்கல்: தமிழகத்தில், 2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்... மேலும் பார்க்க

காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீா... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில வெளிமாநில பயணம்: 34 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டினாா். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில இந்திய... மேலும் பார்க்க

2-ஆவது திருமணம் செய்தவா் தற்கொலை: மணப்பெண், தரகா் உள்பட 6 போ் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே 2-ஆவது திருமணம் செய்த ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துவைத்து பணம் பறித்த பெண் உள்பட த... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்க... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப்பாதையில் ஆபத்தான ‘ஸ்கேட்போா்டிங்’: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை வளைவுகளில், வெளிமாநிலத்தினா் சிலா் ஆபத்தான முறையில் ‘ஸ்கேட்போா்டிங்’ பயிற்சி செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். விபத்துகள் நிகழும் முன்பு இத்தகையப் ... மேலும் பார்க்க