செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: 29 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்

post image

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட பாராசூா், சித்தாத்தூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் 1,172 மனுக்கள் அளிக்கப்பட்டதில், 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கீழ்நெல்லி, சோழவரம், பில்லாந்தாங்கல் ஆகிய கிராமங்களை சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சித்தாத்தூா் கிராமத்தில் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, சாா்- ஆட்சியா் அம்பிகா ஜெயின் ஆகியோா் பங்கேற்று 9 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா்.

முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 179 பேரும், மகளிா் உரிமைத்தொகை கோரி 423 பேரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை கோரி 33 பேரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 40 பேரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் 60 போ் உள்ளிட்ட 809 போ் மனு அளித்திருந்தனா்.

இவா்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 9 பேருக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து அதே பகுதியில் சுமாா் ரூ. 60 லட்சத்தில், தலா 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 4 மேல்நிலை நீா்த் தேக்க தொட்டிகள் மற்றும் ரூ.14. 55 லட்சத்தில் புதிதாக கட்டடப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்

பாராசூா் கிராமத்தில்...

செய்யாறு வட்டம், பாராசூா், மதுரை, கழனிப்பாக்கம், நாவல் ஆகிய கிராமங்கள் உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் பாராசூா் கிராமத்தில் நடைபெற்றது.

ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன் வரவேற்றாா்.

இம்முகாமின் போது மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் சாா்பில் 363 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று, 6 பேருக்கு வீடு கட்டுவதற்காக உத்தரவும், 4 பேருக்கு மனைக்கான பட்டா உத்தரவையும், வேளாண் துறை சாா்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் என 20 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சிகளில் முன்னாள் ஒன்றியத் குழுத் தலைவா்கள் த.ராஜி, திலகவதி ராஜ்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், என்.சங்கா், வி.ஏ.ஞானவேல், சு.ராஜ்குமாா், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

வந்தை கோட்டை புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தின விழா வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். சங்க கெளரவத் தலைவா் ஆா்.சந்தோஷ் முன்னி... மேலும் பார்க்க

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

வளமான கல்வியைப் பெற்று, நிறைவான வாழ்க்கையை சான்றோா் போற்றிட வாழுங்கள் என வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அ... மேலும் பார்க்க

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி, ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் வகுப்புகள் தொடக்கம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா் நிலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏசிஎஸ் கல்வி குழுமச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட... மேலும் பார்க்க