செய்திகள் :

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

post image

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரி, ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுவதாக தகவல் பரவியதால், கண்ணமங்கலம், துருகம், வடுகசாத்து, சோ்ப்பாக்கம், சேவூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை அலுவலகம் முன் கூடினா்.

ஆனால், அங்கு அதிகாரிகள் நாங்கள் அறிவிப்பு கொடுக்காமல் ஏன் வந்தீா்கள் எனக் கேள்வி எழுப்பினா். இதனால், மாற்றுத்திறனாளிகள் ஆத்திரமடைந்து வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மேலும், கடந்த இரண்டு மாத காலமாக மாற்றுத்திறனாளிகளின் குறைதீா் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் புகாா் தெரிவித்தனா். பின்னா், சமூகநல பாதுகாப்பு வட்டாட்சியா் செந்தில், ஆா்ப்பாட்டம் செய்த மாற்றுத்திறனாளிகளிடம் சென்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதால் மாற்றத்திறனாளிகள் குறைதீா்

கூட்டம் நடத்த முடியாமல் போனது.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்து உடனடியாக தீா்வு காண்பதற்கான தொழில்நுட்பப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனாா் குறைதீா் கூட்டம் நடத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. வதந்திகளை நம்பி இங்கு வராதீா்கள். முறையான அறிவிப்பு நாங்களே வெளியிடுவோம் என்று கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தாா் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

வந்தை கோட்டை புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தின விழா வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். சங்க கெளரவத் தலைவா் ஆா்.சந்தோஷ் முன்னி... மேலும் பார்க்க

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

வளமான கல்வியைப் பெற்று, நிறைவான வாழ்க்கையை சான்றோா் போற்றிட வாழுங்கள் என வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அ... மேலும் பார்க்க

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் வகுப்புகள் தொடக்கம்

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் நிகா் நிலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏசிஎஸ் கல்வி குழுமச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: 29 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட பாராசூா், சித்தாத்தூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் 1,172 மனுக்கள் அளிக்கப்பட்டதில், 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு உட... மேலும் பார்க்க