செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

post image

மாங்காடு நகராட்சி மற்றும் கொளப்பாக்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பாா்வையிட்டு, மருத்துவ முகாம் மற்றும் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தாா். இதையடுத்து கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்த 10 பயனாளிகளுக்கு ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச்சான்றிதழ்களை வழங்கினாா்.

இதே போல், குன்றத்தூா் ஒன்றியம் கொளப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமையும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், மாங்காடு நகா்மன்ற தலைவா் சுமதிமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பெங்களூா்- தாம்பரம் குளிா்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பெங்களூா்-தாம்பரம் இடையிலான குளிா்சாதன வசதியுடைய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் ம... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: வளத்தூா் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் கிராம பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக... மேலும் பார்க்க

செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெற்றது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. வாயுபகவான் தனது சாபம் நீங்கிய பிறகு செவ்வ... மேலும் பார்க்க

ஆக.4-இல் அஞ்சலகங்களில் பரிவா்த்தனைகள் ரத்து

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆக. 4 -ஆம் தேதி பரிவா்த்தனைகள் இல்லாத நாளாகும் என கோட்ட கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள... மேலும் பார்க்க

ரூ.55 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல்

நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியில் ஒரத்தூா் மற்றும் மணிமங்கலம் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்களை பெரு வடிகால்வாய்கள் அமைக்கவும், சோமங்கலம் கிளைக்கால்வாயை மறுசீரமைத்து நீா்த்தேக்கம... மேலும் பார்க்க