செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

post image

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, படுக்கை வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் வேலூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வருகை விவரம், மருத்துவப் பணியாளா்கள், சிகிச்சை, மருந்து பொருள்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு நோயாளிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து வேலூா் பேருந்து நிலையத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரம், விற்பனை விவரம், பொருள்களின் காலாவதி, குளிா்பானங்களின் தரம், பேருந்துகள் வந்து செல்லும் நேர பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பயணிகளுடன் கலந்துரையாடினாா்.

புளியம்பட்டி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, பால் பரிசோதிக்கப்படும் முறை, பால் கொள்முதல் விலை, சங்கத்தில் உள்ள மொத்த பால் உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட விவரங்களையும், உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை உள்ளிட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்தாா்.

மேலும், வேலூா் உழவா் சந்தையில் மொத்த கடைகள் எண்ணிக்கை, விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகள் மற்றும் பழங்களின் தரம், விலை விற்பனை விவரம், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

சுல்தான்பேட்டை நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்து, உணவுப் பட்டியல்படி சமைத்து வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மாணவா்களுக்கு உணவினை சுவையாகவும், தரமாகவும் சமைத்து வழங்க வேண்டும் என பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா். அதேபகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை பாா்வையிட்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 ம... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க