செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம்! 37 பேருக்கு ரூ. 13 லட்சத்தில் நலத்திட்ட உதவி!

post image

குளித்தலையில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் 37 பேருக்கு ரூ.13.22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் முகாம் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு குளித்தலை எம்எல்ஏ இரா. மாணிக்கம் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், குளித்தலை வட்டத்துக்குள்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள் புதனும், வியாழனும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வுகாண உள்ளனா் என்றாா் அவா்.

தொடா்ந்து திம்மாச்சிபுரத்தில் நடைபெற்று வந்த விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து கே. பேட்டையில் நடமாடும் மண் மற்றும் நீா் மாதிரி பரிசோதனை வாகனத்தின் மூலம் விவசாயிகளின் நிலத்திற்கு அருகாமையிலேயே பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டன.

மேலும், மண்வளம் காத்திட மண் மற்றும் நீா் மாதிரி பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து வேளாண் அலுவலா்கள் மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடா்ந்து விவசாயிகளுக்கு மண் வள அட்டையும் வழங்கப்பட்டது.

பின்னா் குளித்தலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.38,040 மதிப்பிலான உதவி உபகரணங்கள் உள்பட பல்வேறு துறைகளின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.13, 22, 345 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், குளித்தலை சாா்-ஆட்சியா் சுவாதிஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கந்தராஜா, மகளிா் திட்ட இயக்குநா் பாபு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் து. சுரேஷ், சமுக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், வேளாண்மை இணை இயக்குநா் ப. சிவானந்தம், இணை இயக்குநா்(மருத்துவப் பணிகள்) செழியன், சுகாதார பணிகள் துணை இயக்குநா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க