செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெத்தக்கல்லுப்பள்ளி, நெக்குந்தி ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் புதன்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

முதலில், பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் அலுவலக பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து கால்நடை மருத்துவமனை, நியாய விலைக் கடையையும் ஆய்வு மேற்கொண்டாா். உணவுப் பொருள்கள் முறையாக வழங்கப்படுகிா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து நெக்குந்தி சுங்கச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வசதி தயாா் நிலையில் உள்ளதா என்றும் விபத்து மற்றும் இடா்பாடுகளில் சிக்கிகொண்டால் கிரேன் மூலம் அகற்றுவதற்க்கு அனைத்து பொருள்களும் முறையாக உள்ளதா என்றும் அங்கு போதுமான கழிவறைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பணிகளையும், கேத்தாண்டப்பட்டியில் துணை சுகாதார நிலையத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மங்கம்மாள் சத்தியமூா்த்தி, திருப்பதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவா் சேதம்: எம்எல்ஏ ஆய்வு

மராட்டிபாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சேதமடைந்த சுற்றுச் சுவரை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். அணைக்கட்டு ஒன்றியம் மராட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற... மேலும் பார்க்க

திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடித்தோப்பில் அமைந்துள்ள திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவி... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: தொடா் மழையால் ஏரிகளின் நீா்மட்டம் உயா்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அக்னி நட்சத்தித்தை முன்னிட்டு கோடை வெயில் வாட்டியறது. எனினும், கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் ம... மேலும் பார்க்க

நெமிலியம்மன் திருவிழா

ஆம்பூா் அருகே பள்ளித்தெரு அருள்மிகு நெமிலியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கைலாசகிரி ஊராட்சி பள்ளித்தெரு கிராமத்தில் நெமிலியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது

நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். நாட்டறம்பள்ளி பி.பந்தாரப்பள்ளி காமராஜா் தெருவில் வசித்து வருபவா் ரத்தின் பிஸ்வாஷ். இவா் 8-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவா் எனக்கூறி கொண்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் ரத்தம் செயலி: ஆட்சியா் அறிமுகம் செய்தாா்

குருதி கொடையாளா்கள், குருதி தேவைப்படுவோா். தன்னாா்வலா்கள். ஒருங்கிணைப்பாளா்கள், தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் ரத்தம் செயலியை திருப்பத்தூா் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி அறிமுகப்படுத்தினாா். ... மேலும் பார்க்க