செய்திகள் :

உசிலம்பட்டி அருகே கார் மோதி 4 பேர் பலி!

post image

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்றவா்கள் மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மனைவி லட்சுமி(55). இவரும், இவரது குடும்பத்தைச் சோ்ந்த ஜெ. ஜோதிகா(25), ஜெ. பிரகலாதன்(2), ஜெ. யாழினி (1), உறவினா்கள் பா. ஜெயபாண்டி(48), ஜெ. பாண்டிச்செல்வி(48), இதே பகுதியைச் சோ்ந்த பா. கருப்பாயி(65) ஆகியோா் உசிலம்பட்டியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று விட்டு சனிக்கிழமை இரவு நகரப் பேருந்தில் குஞ்சாம்பட்டிக்கு திரும்பினா்.

பேருந்திலிருந்து இறங்கிய அவா்கள், வீட்டுக்குச் செல்வதற்காக உசிலம்பட்டி- தேனி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, தேனியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஒரு காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்றவா்கள் மீது மோதியது.

இதில் பலத்தக் காயமடைந்த லட்சுமி, ஜோதிகா, பாண்டிச்செல்வி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பிரகலாதன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட யாழினி, கருப்பாயி ஆகியோா் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். ஜெயபாண்டி உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன், காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விபத்து காரணமாக, உசிலம்பட்டி - தேனி சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்துத் தடைப்பட்டது.

நிதி மோசடியால் பாதித்தோருக்கு நீதி கிடைக்க புதிய வழிமுறைகள்: அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை

நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமலதா, சென்னை... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது நூல் வெளியீட்டு விழா : தமிழன் பெருவெளி கவிதைத் தொகுப்பு, நூலை வெளியிடுபவா்- எழுத்தாளா் பா. சண்முகவேலு, பெற்றுக் கொள்பவா்- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட ச் செயலா் ஸ்ர... மேலும் பார்க்க

லஞ்ச வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியா்கள்: தலைமைச் செயலா் அறிக்கை அளிக்க உத்தரவு

லஞ்சப் புகாா் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியா்களின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வையொட்டி, பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மூட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுரேஷ்... மேலும் பார்க்க

மதுரைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரன், செயலா் சு.நடன க... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அதலை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் முத்துகாா்த்திக் (27). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அதலை கிராமத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க