செய்திகள் :

``உச்ச நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வாதாட நீதியரசர்கள் துணை நிற்க வேண்டும்'' - முதல்வர் ஸ்டாலின்

post image

திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் மன்னார்குடி நகரச் செயலாளர் வீரா.கணேசன், இவரது தம்பி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன் இல்ல திருமணம் தஞ்சாவூர் மஹாராஜா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேசர். உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின்

துரை.சந்திரசேகரன் பேசும் போது, "தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் ஒன்று அதிமுகவிடம் உள்ளது. வரும் தேர்தலில் எட்டு தொகுதியிலும் வெற்றி பெற்று வரலாறு படைப்போம்" என்றார்.

திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் ஸ்டாலின் பேசியதாவது, "கழகத்தின் இரு தூண்களில் ஒரு தூண் துரை.சந்திரசேகரன், மற்றொரு தூண் வீரா.கதிரவன். ஐந்தாவது முறை எம்.எல்.ஏவாக இருக்கும் துரை.சந்திரசேகரன் மக்கள் செல்வாக்கை பெற்றவர். குடும்பத்திற்கு மட்டுமல்ல, கட்சிக்கும் பெருமை சேர்ப்பவர். இதே போல் மன்னார்குடி நகரச்செயலாளராக ஐந்தாவது முறை இருப்பவர் வீரா.கணேசன். ஒரு முறை இருப்பதே கடினம். ஐந்தாவது முறை இருக்கும் அவர் சமார்த்தியமானவர்.

உச்ச நீதிமன்றம்

இங்கு நீதியரசர்கள் தமிழில் பேசினார்கள். உச்ச நீதிமன்ற நீதியர்சர்கள் பலர் தமிழகத்திற்கு வரும் போது நாங்கள் கேட்டு கொள்வது உச்ச நீதிமன்ற வழக்காடு மொழி தமிழில் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாம் கோரிக்கை வைத்து வருகிறோம்.

கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் போது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். நீதி வழங்ககூடிய அந்த தீர்ப்பு தமிழில் வழங்கக்கூடிய சூழல் பெற்றுள்ளோம். உச்ச, உயர் நீதிமன்றங்களில் தமிழில் வாதாட கூடிய சூழலை உருவாக்கி தர வேண்டும். எங்களது இந்த கோரிக்கை நிறைவேறுவதற்கு நீதியரசர்கள் துணை நிற்க வேண்டும்" என்றார்.

`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' - கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. அப்பகுதி விவசாயிகளிடம் அந்த ஆலை கரும்பு கொள்முதல் செய்தது. கரும்பு கொடுத்த விவசாயி... மேலும் பார்க்க

கல்லணை, ரோடு ஷோ, சிலை திறப்பு, நலத்திட்ட உதவி.. முதல்வரின் தஞ்சாவூர் விசிட்

கடந்த 12 - ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டெல்டா குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிலையில், தஞ்சையில் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ... மேலும் பார்க்க

``திமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது'' - ஆர்.பி.உதயகுமார்

"ஒருவரை ஒருவர் தாக்கினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், காவல் நிலையத்தையே தாக்கினால் எங்கே போய் புகார் அளிப்பது?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.மு.க.ஸ்டாலின்மத... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்

ஈரான் மீது இஸ்ரேல் 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' நடத்த தொடங்கி இன்றோடு நான்கு நாள் ஆகிறது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை பொழிந்து வருகிறது.இந்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இருக்க தீர்வு உண்டா?

Doctor Vikatan: சிலருக்கு பசியின்மை பிரச்னை இருக்கிறது. சிலருக்கு மலச்சிக்கல் படுத்துகிறது. இன்னும் சிலருக்கோ சாப்பிட்டது செரிக்காமல் வயிற்று உப்புசம், குமட்டல், நெஞ்சு கரித்தல் என ஏதோ ஒரு பிரச்னை இரு... மேலும் பார்க்க

Lung Health: உட்காரும் விதம் முதல் பாடுவது வரை.. நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க 7 டிப்ஸ்!

நுரையீரல் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுத் தரும் சுவாசக் கருவி. அது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் ஆயுளை அதிகரிக்க முடியும் என்கிற ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன், ஆரோக... மேலும் பார்க்க