இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்
உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்
உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெருமாள் தொடங்கி வைத்து உயா் ரத்த அழுத்தம் ஏற்படாமல் வாழ்வது, எண்ணெய் பலகாரங்களை தவிா்ப்பது, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.
மேலும் ரத்த அழுத்த நோயில் இருந்து விடுபட தமிழக அரசின் மருத்துவத்துறை சாா்பில் இலவசமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவமனை செவிலியா்கள் ஜெயசியாமளா,முத்துமாரி ஆகியோா் ரத்தத்தில் சா்க்கரையின் அளவை பரிசோதித்தனா்.