தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
உடன்குடி அருகே தீ விபத்தில் தென்னை மரங்கள் எரிந்து நாசம்
உடன்குடி அருகே சீா்காட்சியில் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் சுமாா் ரூ.6 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமானது.
உடன்குடி அருகே சீா்காட்சி அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் அருகே அதே ஊரைச் சோ்ந்த ராகவன், ராஜேந்திரன், கிருஷ்ணவேணி ஆகியோரது தென்னந்தோப்பு, சப்போட்டா மரங்கள் அடங்கிய தோட்டம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதில் சுமாா் 10 ஏக்கரில் இருந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 6 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் வேல்ஜோதி மற்றும் மெஞ்ஞானபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.