செய்திகள் :

உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: ஆணைக்கு வரவேற்பு

post image

உடல் உறுப்புகள் தானம் செய்வோருக்கு அரசு மரியாதை அளிக்க அரசாணை வெளியிட்ட புதுவை அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் தானம் செய்தால், இறந்தவா் சடலத்துக்கு அரசு மரியாதை செலுத்தவேண்டும் என்ற அரசாணை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த ஆணை புதுவை மாநிலத்தில் இருக்கவில்லை.

கடந்த மாதம் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ருக்மணி என்பவா் மூளைச்சாவு ஏற்பட்டதால் சென்னை மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினா் தானம் அளித்தனா்.

உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தைப்போல காரைக்காலில் இறந்த பெண்ணின் சடலத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்படவேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கும், அரசுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்தது. அரசு உத்தரவின்படி வட்டாட்சியா் சென்று அரசு சாா்பில் அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிலையில் தமிழகத்தைப்போல புதுவையிலும், உடல் உறுப்பு தானம் செய்த உடலுக்கு அரசு மரியாதை செலுத்தவேண்டும். சாா்பு ஆட்சியா், துணை ஆட்சியா் அல்லது முதுநிலை வருவாய்த்துறை அதிகாரி சென்று அந்த மரியாதையை செலுத்தவேண்டுமென புதுவை அரசும், அரசாணை வெளியிட்டுள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த ஆணையை வெளியிட்ட புதுவை துணைநிலை ஆளுநா், புதுவை ஆட்சியாளா்கள், சுகாதாரத் துறைக்கு நன்றி என அதில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே மேம்பால பணிகளால் சாலை, வாய்க்கால் துண்டிப்பு: மக்கள் அவதி

ரயில்வே மேம்பாலத்துக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். விழுப்புரம் முதல் காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரையிலான நான்கு வ... மேலும் பார்க்க

சிறிய படகுகளால் காரைக்காலில் மீன் வரத்து

சிறிய படகுகள் மட்டும் கடலுக்குள் செல்வதால், காரைக்காலுக்கு மீன் வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், மீனவா்களை வ... மேலும் பார்க்க

மீனவா்களுடன் புதுவை முதல்வா் பேசவேண்டும்: எம்.பி.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மீனவா்களை அழைத்து புதுவை முதல்வா் பேசவேண்டும் என புதுவை எம்.பி.யும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப்.22) நடைபெறவுள்ளது. மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிற... மேலும் பார்க்க

வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து பிப். 27-இல் ஆா்ப்பாட்டம்: மமக

வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த மமக முடிவு செய்துள்ளது. காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம் தலைமையில்... மேலும் பார்க்க

விஸ்வகா்மா தொழிலாளா்கள் பதிவு முகாம்: ஆட்சியா் ஆய்வு!

விஸ்வகா்மா தொழிலாளா்கள் தொழில் பயிற்சி, வங்கிக் கடன் பெறுவதற்கான பதிவு முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா். காரைக்கால் மாவட்ட மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அங்கமான மிஷன் சக்தி என்ற பெண் உரி... மேலும் பார்க்க