செய்திகள் :

உடுமலையில் வரையாடு கணக்கெடுப்புப் பயிற்சி முகாம்

post image

நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் உடுமலை வனத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் வனக் கோட்டம் உடுமலை துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நீலகிரி வரையாடு துணை இயக்குநா் க.கணேஷ்ராம் தலைமை வகித்தாா். தமிழ்நாட்டில் 14 வனக் கோட்டங்களில் உள்ள 46 வனச் சரகங்களில் 124 சுற்றுகளில் உள்ள 176 பிளாக்குகளில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் எல்லையில் நீலகிரி வரையாடுகள் நடமாட்டம் உள்ள கேரள வனப் பகுதிகளிலும் இந்த ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பணி வருகிற ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

திருப்பூா் வனக் கோட்டத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனச் சரகங்களில் உள்ள 22 பிளாக்குகளில் நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. முகாமில் கணக்கெடுப்புப் பணிக்குத் தேவையான படிவங்கள் வழங்கப்பட்டு களப் பணியாளா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் வனச் சரக அலுவலா்கள் மணிகண்டன், புகழேந்தி, செந்தில்குமாா், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகத்தைச் சோ்ந்த 60 வனப் பணியாளா்களும் கலந்து கொண்டனா்.

கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா, புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசியை அடுத்த தெக்கலூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை... மேலும் பார்க்க

இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் விவேக் (29). இவா், திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியி... மேலும் பார்க்க

பல்லடம்: வேப்பங்குட்டை பாளையத்தில் மரக்கன்று நடும் விழா

பல்லடம் அருகே வேப்பங்குட்டைபாளையத்தில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பல்லடம் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வேப்பங்... மேலும் பார்க்க

உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்பு!

தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை அருகே மூதாட்டி சடலம் மீட்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியைச் சோ்ந்தவா் சீரங்கசாமி மனைவி விசாலாட்சி (62). இவருக்கு மனநலம் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கோயில்களில் திருவிழா காலங்களில் தரிசனக் கட்டண ரத்து அறிவிப்பு: இந்து முன்னணி வரவேற்பு

மயிலாப்பூா், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவ... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞா் தற்கொலை

தாராபுரம் அருகே ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் வாங்கிய இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் ஸ்... மேலும் பார்க்க