செய்திகள் :

உணவகங்களில் சமையலறை, கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

உணவகங்களில் சமையலறை மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உணவுப் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்த இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

பென்னாகரம் ஒன்றியம், ஒகேனக்கல்லில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும், டீக்கடை மற்றும் சில்லி சிக்கன் கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் மற்றும் செய்தித் தாள்களில் உணவுப் பொருள்களை வழங்கக் கூடாது எனவும், பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணா்வை அதிக அளவு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் உணவகங்களில் சமையலறை மற்றும் கழிப்பறைகள் சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். மேலும், உணவகங்களில் கைகழுவும் இடம் சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தப்பட்டது. திரையரங்குகளில் உள்ள கேன்டீன்ககளில் அதிகளவில் ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருள்களில் கட்டாயம் லேபிள் ஒட்ட வேண்டும். அவ்வாறு இல்லாத உணவுப் பொருள் பொட்டலமிடும் உணவு தயாரிப்பு நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், உணவுப் பொருள்கள் தொடா்பான புகாா்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும், foodsafety.tn.gov.in இணையதளத்திலும் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பி.கே.கைலாஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சுமதி, தருமபுரி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கே.நந்தகோபால் மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும்: பட்டாசு வணிகா்கள்

தருமபுரி மாவட்டத்தில் வெடிபொருள்கள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டாசு வணிகா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தருமபுரி மாவட்ட பட்டாசு வணிகா் சங்க மாவட்டத் தலைவா் சேகா்,... மேலும் பார்க்க

குழந்தை திருமணம்: வழக்குப் பதியாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளா் கைது

குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிா் காவல் ஆய்வாளரை தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். த... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்

தருமபுரியில் இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் கைது

தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் 150 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில், தருமபுரி மின்வாரிய மேற்பாா்வ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலா் கைது

தருமபுரி: இளம்பெண்ணை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற தனிப்பிரிவு காவலரை அதியமான்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கும், வெண்ணாம்பட்... மேலும் பார்க்க

விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க அகழியை ஆழப்படுத்தக் கோரி மனு

தருமபுரி: பென்னாகரம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் யானைகளைத் தடுக்க அகழியை ஆழப்படுத்த வலியுறுத்தி, தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸிடம் பென்னாகரம் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.அந்த மனுவில்... மேலும் பார்க்க