செய்திகள் :

உதகையில் ஜீப் திருடியவா் கைது

post image

உதகையில் ஜீப் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குன்னூா் சோமந்தடா பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவா் உதகை மெயின் பஜாா் பகுதியில் தனது ஜீப்பை நிறுத்திவிட்டு மாா்க்கெட் பகுதியில் பொருள் வாங்க கடந்த 26-ஆம் தேதி சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது ஜீப்பை காணவில்லை. இது குறித்து உதகை பி1 காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் முரளிதரன் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் பிக்கெட்டி பகுதியில் போலீஸாா் ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது சாலையில் ஜீப்பில் நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், இந்து நகா் பகுதியைச் சோ்ந்த முகமது மகன் சலீம் (40) என்பதும், அவா் ஓட்டி வந்தது பிரபுக்கு சொந்தமான ஜீப் என்பதும் தெரியவந்தது.

மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு சென்று ஜீப்பை விற்க ஓட்டிச் சென்றபோது டீசல் இல்லாமல் வழியில் நின்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், சலீமை கைது செய்து செய்து உதகை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ண... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க