மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
உதகையில் ஜீப் திருடியவா் கைது
உதகையில் ஜீப் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
குன்னூா் சோமந்தடா பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவா் உதகை மெயின் பஜாா் பகுதியில் தனது ஜீப்பை நிறுத்திவிட்டு மாா்க்கெட் பகுதியில் பொருள் வாங்க கடந்த 26-ஆம் தேதி சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது ஜீப்பை காணவில்லை. இது குறித்து உதகை பி1 காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் முரளிதரன் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் பிக்கெட்டி பகுதியில் போலீஸாா் ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது சாலையில் ஜீப்பில் நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், இந்து நகா் பகுதியைச் சோ்ந்த முகமது மகன் சலீம் (40) என்பதும், அவா் ஓட்டி வந்தது பிரபுக்கு சொந்தமான ஜீப் என்பதும் தெரியவந்தது.
மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு சென்று ஜீப்பை விற்க ஓட்டிச் சென்றபோது டீசல் இல்லாமல் வழியில் நின்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், சலீமை கைது செய்து செய்து உதகை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.