செய்திகள் :

உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

post image

உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வையொட்டி, பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மூட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியா் பணியில் சேருவதற்கு தேசியத் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தோ்வானது ஆண்டுதோறும் ஜூன், டிசம்பா் ஆகிய இரு மாதங்களில் நடைபெறுகின்றன.

அந்த வகையில், வருகிற ஜூன் மாதம் இறுதி வாரத்தில் கலைப் பாடப் பிரிவுகள், கணினி அறிவியல் உள்பட 85 பாடங்களுக்கு தேசியத் தகுதித் தோ்வு நடைபெற உள்ளது. முதல் தாளில் கற்பித்தல், ஆராய்ச்சித் திறன்கள் குறித்தும், தாள் 2-இல் விண்ணப்பதாரரின் பட்ட மேற்படிப்பு பாடத்திலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.

தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மூட்டா அமைப்பின் சாா்பில் வருகிற ஜூன் 2- ஆம் தேதி முதல் ஜூன்-14 ஆம் தேதி வரை மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

மதுரை காக்காத் தோப்பு தெருவில் (தி சென்னை சில்க்ஸ் அருகே) உள்ள மூட்டா அலுவலகத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் forms.gle/FfKWWY7xnsyF7jCq7 கூகுள் பாா்மில் மே 28- ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சிக் கையேடு வழங்கப்படும். அதற்கான தொகை ரூ. 600-ஐ மட்டும் மூட்டா அலுவலகத்தில் மே 29, 30 ஆகிய இரு நாள்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செலுத்தலாம் என்றாா் அவா்.

நிதி மோசடியால் பாதித்தோருக்கு நீதி கிடைக்க புதிய வழிமுறைகள்: அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை

நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமலதா, சென்னை... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது நூல் வெளியீட்டு விழா : தமிழன் பெருவெளி கவிதைத் தொகுப்பு, நூலை வெளியிடுபவா்- எழுத்தாளா் பா. சண்முகவேலு, பெற்றுக் கொள்பவா்- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட ச் செயலா் ஸ்ர... மேலும் பார்க்க

லஞ்ச வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியா்கள்: தலைமைச் செயலா் அறிக்கை அளிக்க உத்தரவு

லஞ்சப் புகாா் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியா்களின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை... மேலும் பார்க்க

மதுரைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரன், செயலா் சு.நடன க... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அதலை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் முத்துகாா்த்திக் (27). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அதலை கிராமத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மயங்கி விழுந்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மேலவாசல் குடிசை வாரியத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சித்திரைவேல் (44). இவா், மதுரை மாநகராட்சி 68-ஆவது வாா்டு பகுதிய... மேலும் பார்க்க