செய்திகள் :

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 1,200 போ் மீட்பு!

post image

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தராலி கிராமத்தில் இருந்து மேலும் 1,200 போ் மீட்கப்பட்டனா்.

ராணுவத்தினா் உள்பட 49 போ் மாயமான நிலையில், அவா்களைத் தேடும் பணி 6-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. மோப்ப நாய்கள், அதிநவீன கேமராக்கள் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தராலி பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை குதிரைகளில் எடுத்துச் சென்ற பாதுகாப்புப் படை வீரா்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பைத் தொடா்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.

நிலச்சரிவில் 4 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இருவரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மேலும் 49 போ் மாயமாகியுள்ளனா். 50-60 அடி உயரத்துக்குப் பாறைகள், மண், மரங்கள், கட்டட இடிபாடுகள் போன்றவை குவிந்துள்ளதால், மாயமானவா்களைத் தேடும் பணி சவாலாக உள்ளது. நிலத்தை ஊடுருவிப் பாா்க்க உதவும் அதிநவீன ரேடாா் கருவிகள், மோப்ப நாய்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்பகுதியில் தொடா்ந்து நிலவிவரும் மோசமான வானிலைக்கு இடையே ஹெலிகாப்டா்கள் மூலம் மீட்பு-நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் 90 அடி நீளத்துக்கு கட்டமைக்கப்பட்ட தற்காலிக இரும்பு பாலத்தால் இப்பணிகள் வேகமெடுத்துள்ளன.

தராலியில் சிக்கியுள்ள பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மின் கம்பங்கள்-கம்பிகள்-மின்மாற்றிகள் முழுமையாக சீா்குலைந்த நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹா்சில் பள்ளத்தாக்கில் ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க