செய்திகள் :

உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!

post image

உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்களை, மாநிலம் முழுவதுமுள்ள மதரஸா-க்களின் பாடத்திட்டங்களில் இணைக்கப்படுவதாக உத்தரகண்ட் மதரஸா வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை, வெளியிட்டுள்ள அம்மாநில மதரஸா கல்வி குழுவின் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி, மாணவர்கள் இடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.

உத்தரகண்டில் செயல்பட்டு வரும் சுமார் 451 மதரஸா-க்களில், 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, முஃப்தி ஷாமூன் காஸ்மி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சூஃபி அறிஞர்கள் மற்றும் கல்வியாளர் குழுவுடன் சென்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில், பிரதமர் மோடியின் தலைமையிலான, ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய ராணுவத்தை அவர் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புக்கு பின்னர், தனது அறிவிப்பை வெளியிட்ட காஸ்மி, ராணுவப் படைகள் வெளிகாட்டிய வீரம் நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் மதரஸா மாணவர்களும் அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ”நாம் மதரஸா பாடத்திட்டங்களில் என்.சி.ஆர்.சி. பாடத்திட்டத்தை இணைத்துள்ளோம், அதன் மூலம் பிரதான கல்வியுடன் மாணவர்கள் இணைந்துள்ளனர். இந்த மாற்றம், கல்வி நிலையங்களில் உயர்தர கல்வியை வழங்கி வருகின்றது. மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய பாடங்களையும் இணைத்து அதன் மூலம் வருங்காலத் தலைமுறையினர் நம் நாட்டு ராணுவ வீரர்களின் துணிவு, வீரம், பலம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

மேலும், பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த ஒரு பாடத்தைச் சேர்ப்பதற்காக பாடத்திட்டக் குழுவின் கூட்டம் விரைவில் கூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்துடன், இந்தப் புதிய முயற்சியை வரவேற்ற உத்தரகண்ட் வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஷதாப் ஷாம்ஸ், இந்த உத்தரகண்ட் மாநிலம் வீரர்களின் நிலம் எனவும் அழைக்கப்படும் என்றும் நவீன மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி இங்கு பயிலவில்லை என்றால் வேறு எங்கு கற்றுக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 300 கி.மீ. நீள மேம்பாலப் பணிகள் நிறைவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இத் திட்டத்தில் ரயில் பாதைக்கான 300 கி.மீ. மேம்பாலப் பணிகள் நிறைவுபெற்ற... மேலும் பார்க்க

விஞ்ஞானி ஜெயந்த் நாா்லிகா் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

பிரபல வானியற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு நாா்லிக்கா் (86) செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது குடும்பத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்தாா். ‘ஹாயில் - நாா்லிகா் பு... மேலும் பார்க்க

ஜொ்மனியின் புதிய பிரதமருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜொ்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொ்ஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொ்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நட... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு: எம்.பி.க்கள் குழு இன்றுமுதல் வெளிநாடு பயணம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் புதன்கிழமை (ம... மேலும் பார்க்க

உ.பி.: அடுத்தடுத்து இரு ரயில்களைக் கவிழ்க்க சதி- ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்ப்பு

உத்தர பிரதேச மாநிலம், ஹா்தோய் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரு பயணிகள் ரயில்களைக் கவிழ்க்க சதிவேலை நடந்துள்ளது. ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக காவல் த... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: இடைக்கால உத்தரவுக்கான 3 விவகாரங்கள் குறித்து மட்டும் விசாரணை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்

வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய மூன்று விவகாரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணையை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க