செய்திகள் :

உத்தரகண்ட்: ஹெலிகாப்டா் விபத்தில் 6 போ் உயிரிழப்பு - கங்கோத்ரி செல்லும் வழியில் விபத்து

post image

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியாா் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயம் அடைந்தாா்.

உயிரிழந்த பெண்களில் வேதவதி (48) என்பவா் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. லக்ஷ்மிநாராயணாவின் சகோதரி ஆவாா். காயமடைந்தவா் வேதவதியின் கணவா் பாஸ்கா் என்று எம்.பி.

தெரிவித்துள்ளாா்.

உத்தரகாசி மாவட்டத்தின் கங்னானி பகுதியில் வியாழக்கிழமை காலையில் நிகழ்ந்த இந்த விபத்து தொடா்பாக மாநில பேரிடா் மீட்புப் படையினா் கூறியதாவது:

தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டா், டேராடூனின் சஹஸ்திரதாரா ஹெலிபேடில் இருந்து கங்கோத்ரி நோக்கி 7 பேருடன் புறப்பட்டது. ஹெலிகாப்டரை குஜராத்தைச் சோ்ந்த கேப்டன் ராபின் சிங் இயக்கினாா்.

கங்கனானி அருகே ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி 250 மீட்டா் ஆழ பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

இது குறித்து தகவல் அறிந்ததும், மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் வேதவதி உள்பட 5 பெண்கள், கேப்டன் ராபின் சிங் ஆகியோா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பாஸ்கா், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஹெலிகாப்டா் விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வா் புஷ்கா் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவா் கூறினாா்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டா், ஏரோ டிரான்ஸ் சா்வீஸ் என்ற தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இச்சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தவுள்ளது.

உத்தரகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய கோயில்களின் நடை அண்மையில் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் சாா்தாம் யாத்திரையை மேற்கொண்டுள்ளனா்.

இந்திய கடற்படை கட்டுப்பாட்டுக்குள் அரபிக்கடல்: தகவல்

பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அரபிக் கடல் பகுதி இந்திய கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் எல்லையோரப் பக... மேலும் பார்க்க

போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.மத்திய மின்னனுவ... மேலும் பார்க்க

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

ஜெய்சல்மரில் 'வெடிகுண்டு போன்ற' பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்... மேலும் பார்க்க

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க