செய்திகள் :

உபி: "ஏன் பழைய மிச்சரைக் கொடுத்த?" - ஊழியருக்கு நீதிபதி அனுப்பிய சம்மன் வைரல்; பின்னணி என்ன?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருக்கும் பெண் நீதிபதி மதிய உணவு இடைவெளியில் கோர்ட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விருந்தினர் ஒருவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அந்நேரம் கோர்ட் ஊழியர் நவீன் நீதிபதியைப் பார்க்க வந்தார். அவரிடம் விருந்தினருக்கு தேனீரும், பிஸ்கெட்டும் கொண்டு வரும்படி பெண் நீதிபதி கேட்டுக்கொண்டார். சரி என்று சொல்லிவிட்டுச் சென்ற நவீன் தேனீர் எடுத்து வந்தார்.

அப்படி வரும்போது நீதிபதி கேட்ட பிஸ்கெட் கொண்டு வரவில்லை. அதனை எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற நவீன் தாமதமாக நம்கீன் எனப்படும் மிச்சரை எடுத்து வந்து கொடுத்தார்.

நீதிபதியின் சம்மன்
நீதிபதியின் சம்மன்

அதனை வாங்கிப் பார்த்த நீதிபதி டென்சனாகிவிட்டார். அதன் கெட்ட வாசனையும், சுவையும் பிடிக்காமல் நவீனிடம் நீதிபதி கோபப்பட்டுப் பேசினார்.

வேண்டுமென்றே தூக்கி எறியக்கூடிய மிச்சரை எனக்குக் கொண்டு வந்து சப்ளை செய்வதாகக் கூறி நீதிபதி கோர்ட் ஊழியரைத் திட்டினார்.

அதோடு எதற்காக இது போன்று கெட்டுப்போன மிச்சரை சப்ளை செய்தாய் என்று விளக்கம் கேட்டு நீதிபதி கோர்ட் ஊழியருக்குச் சம்மன் அனுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதிபதி அனுப்பி இருக்கும் சம்மனில், "எனக்கு ஏன் திட்டமிட்டு இந்தத் தவறைச் செய்தீர்கள்" என்று கேள்வி எழுப்பி, வரும் 31ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தனது சம்மனில் குறிப்பிட்டுள்ளார்.

சில அடி தூரத்தில் இருக்கும் கப்போர்டில் பிஸ்கெட் பாக்ஸ் தயார் நிலையிலிருந்தது. அப்படி இருந்தும் நான் கேட்ட பிஸ்கெட் கொடுக்காமல் கெட்டுப்போன மிச்சரை கொடுத்து இருப்பதாகவும் நீதிபதி தனது சம்மனில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி அனுப்பி இருக்கும் சம்மன் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. இதற்கு நீதிமன்ற ஊழியர் நீதிபதிக்குக் கையால் எழுதி கொடுத்திருக்கும் பதிலும் வைரலாகி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"குழந்தை இறந்துவிட்டது" - அரசு மருத்துவமனை மறுத்ததால் தனியார் மருத்துவமனையில் பிரசவம்; என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.அங்குள்ள ஹசரிபாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனீஷா குமாரி என்ற கர்ப்பிணிப் பெண் ... மேலும் பார்க்க

Mahua Moitra: TMC எம்.பி மஹுவா மொய்த்ரா பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி-யுடன் திருமணம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எம்.பி.யாக இருக்கிறார். ஏற்கனவே வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை திரு... மேலும் பார்க்க

நெதர்லாந்து மியூசியத்தில் `200 ஆண்டுகள் பழமையான ஆணுறை!' - அதில் உள்ள படம் சொல்வதென்ன?

19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் ம... மேலும் பார்க்க

ஒரேஇடத்தில் நின்றுகொண்டு மாதம் ரூ.5 - 8 லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்டோ டிரைவர்! - இது எப்படி?

மும்பையின் புறநகர் பகுதி ஆட்டோக்களால் சூழப்பட்ட நெருக்கடியை சந்தித்து வரும் ஒரு பகுதியாகும். இந்த கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் வண்டியை எங்கேயும் கொண்டு செல்லாமல் ... மேலும் பார்க்க

ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு க... மேலும் பார்க்க