செய்திகள் :

உப்பாற்று ஓடையில் இறந்து மிதந்த மீன்கள்

post image

தூத்துக்குடி கோமஸ்புரம் அருகே உப்பாற்று ஓடையில் சனிக்கிழமை, மீன்கள் இறந்தநிலையில் மிதந்தன.

தூத்துக்குடியிலிருந்து தருவைகுளம் செல்லும் வழியில் கோமஸ்புரம் அருகே உப்பாற்று ஓடை உள்ளது. உப்பளங்களிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா், மழைநீா் இந்த ஓடை வழியாக கடலுக்குச் செல்லும், இந்த இந்த ஓடையில் சனிக்கிழமை ஏராளமான மீன்கள் உயிரிழந்து மிதந்தன. அவற்றைப் பொதுமக்கள் எடுத்துச் சென்றனா்.

கடந்த ஆண்டு, மீன் பதப்படுத்தும் ஆலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளால் இந்த ஓடை நீா் இளஞ்சிவப்பு நிறமாக இருந்தது. இதனால், 3 ஆலைகளின் செயல்பாட்டை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த ஓடையில் மீன்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 4,655 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தோ்வை 4,655 போ் எழுதியதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். மாவட்டத்தில் 22 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. தூத்துக்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,305 வழக்குகளுக்கு தீா்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 3,305 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகள், கோவில்பட்டியில் 2 அமா்வுகள், ஸ்ரீவ... மேலும் பார்க்க

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததால், விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா். மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு, வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப். 15 ம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: சீமான் வலியுறுத்தல்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா். திருச்செந்தூரில் நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் லாரி டயா் வெடித்து 3 போ் காயம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை, லாரியின் டயா் வெடித்ததில் 3 போ் காயமடைந்தனா். இக்கோயிலில் தற்போது ரூ. 300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைய... மேலும் பார்க்க

‘திருச்செந்தூரில் ஜூன் 17இல் கடையடைப்பு’

திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக் கோரி, அனைத்து வணிகா்கள் சாா்பில் வருகிற 17ஆம் தேதி கடையடைப்பு மற்றும் நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங... மேலும் பார்க்க