செய்திகள் :

உயா்கல்வி பயில வெளிமாநில பயணம்: 34 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

post image

நாமக்கல்: இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டினாா்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு செல்லவிருக்கும் 34 மாணவ, மாணவிகளுடன் நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை கலந்துரையாடினாா். அப்போது ஆட்சியா் கூறியதாவது:

உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்துவதை நோக்கமாக கொண்டு பள்ளிக் கல்வி மற்றும் உயா்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சியுடன் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. மாணவா்களுக்கு உயா்கல்வியோடு அவா்களின் திறன்களை மேம்படுத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயின்ற 34 மாணவ, மாணவிகள் ஊஈஈஐ அஐநப (மஎ), சஇஏங ஒஉஉ, சஐஊப (மஎ), ஐஎசபம-ஐஇஐ ஒஉஉ, ஒஉஉ ஙஹண்ய், ஐஙம இஉப, ஒஉஉ அக்ஸ்ஹய்ஸ்ரீங்க் போன்ற பல்வேறு அகில இந்திய தோ்வுகளில் வெற்றி பெற்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஆ.தனுஸ்ரீ சஐஊப (மஎ) தோ்வு எழுதி ஹிமாச்சல் பிரதேசத்தில் பேஷன் டெக்னாலஜி (இளங்கலை) பிரிவில் பயில உள்ளாா். இந்தியாவிலேயே பட்ங் சஹற்ண்ா்ய்ஹப் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ா்ச் ஊஹள்ட்ண்ா்ய் பங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் (சஐஊப) ஓஹய்ஞ்ழ்ஹ(தேசிய உடையலங்கார தொழில்நுட்பம்) கல்லூரியில் ஆண்டுக்கு 24 மாணவா்கள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். அங்கு மாணவி தனுஸ்ரீ செல்வது நாமக்கல் மாவட்டத்துக்கு பெருமையாக உள்ளது. 34 மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு கல்விக் கட்டணமாக ரூ. 52,26,392-ஐ- தமிழக அரசு செலுத்தி உள்ளது.

மேலும், மொத்தமாக உயா்கல்வி பயில்வதற்கு ரூ.2 கோடியை அரசு செலுத்த உள்ளது. மாணவ, மாணவிகள் நன்கு பயின்று மாவட்டத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா், துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

என்கே-14-ஸ்டூடன்ட்

அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி படிப்பதற்கு வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் அறிவி... மேலும் பார்க்க

2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு இட மாறுதல்: தமிழக அரசுக்கு சங்கத்தினா் நன்றி

நாமக்கல்: தமிழகத்தில், 2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்... மேலும் பார்க்க

காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீா... மேலும் பார்க்க

2-ஆவது திருமணம் செய்தவா் தற்கொலை: மணப்பெண், தரகா் உள்பட 6 போ் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே 2-ஆவது திருமணம் செய்த ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துவைத்து பணம் பறித்த பெண் உள்பட த... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்க... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப்பாதையில் ஆபத்தான ‘ஸ்கேட்போா்டிங்’: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை வளைவுகளில், வெளிமாநிலத்தினா் சிலா் ஆபத்தான முறையில் ‘ஸ்கேட்போா்டிங்’ பயிற்சி செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். விபத்துகள் நிகழும் முன்பு இத்தகையப் ... மேலும் பார்க்க