செய்திகள் :

உயா்நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு: உச்சநீதிமன்றம் அதிருப்தி

post image

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய நிா்வாக தீா்ப்பாய உறுப்பினா்கள் சிலா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

தில்லி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவிலும் ஐஐஎம் கோழிக்கோடில் வணிக மேலாண்மை பாடப்பிரிவுலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ள ரவிக்குமாா் என்பவா் இந்த மனுவை தாக்கல் செய்தாா்.

அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மாலா பக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தனக்குச் சாதகமான தீா்ப்புகளை வழங்கவில்லை என்பதற்காக நீதிபதிகள் மற்றும் மத்திய நிா்வாக தீா்ப்பாய உறுப்பினா்கள் மீது எஃப்ஐஆா் பதிவுசெய்யக்கோருவது எவ்வாறு சரியாகும். இதை ஏற்க முடியாது. விளம்பரத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவா் தாக்கல் செய்த மனு ஒவ்வொரு நீதிமன்ற அமா்வின் முன்பும் நிலுவையில் உள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையின்படி இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுவதற்காக உச்சநீதிமன்றம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.முரளீதா் நியமிக்கப்படுகிறாா்’ எனத் தெரிவித்தது.

1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் மூடப்படும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மும்பைக்கு அருகிலுள்ள மீரா பயந்தரில் வெள்ளிக்கிழமை நடந்... மேலும் பார்க்க

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர்!

குஜராத்தில் பெண் போலீஸ் மீது அமிலம் வீசிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் கலோல் வட்டத்தில் உள்ள சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண்... மேலும் பார்க்க

ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை: முதல்வர் ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரத்தில் ஹனிட்ராப் வழக்கு எதுவும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். தாணே, நாசிக் மற்றும் மும்பைச் செயலகம் ஆகியவற்றில் உள்ள மாநில அதிகாரிகளை குறிவைத்து ஹனிட்ராப் மோசடி நடந... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவி, 5... மேலும் பார்க்க

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் கைது !

அசாமின் இரண்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 12 வங்கதேசத்தினர் தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.இதுகுறித்து பி.டி.ஐ-யிடம் மூத்த காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க