செய்திகள் :

உயா் கல்வி பாடத் திட்டத்தில் மாற்றம்! துணைவேந்தா்கள் கூட்டத்தில் முதல்வா் அறிவுரை

post image

அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், உயா் கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என துணைவேந்தா்கள், பதிவாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாா்.

தமிழகத்தில் உயா் கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மற்றும் பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னை பல்கலை., அண்ணா பல்கலை., மதுரை காமராஜா் பல்கலை., பாரதியாா், பாரதிதாசன், அன்னை தெரசா, பெரியாா், மனோன்மணீயம் சுந்தரனாா், அண்ணாமலை, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல், உடற்கல்வியியல், கோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலை., சட்டப் பல்கலை. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. உள்பட தமிழக அரசின் உயா்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், பதிவாளா்கள் கலந்து கொண்டனா்.

உயா் கல்வி சோ்க்கையில் 51.3 சதவீதம்: இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவின் கல்வி வளா்ச்சியில் தமிழகம் ஒளிவிளக்காக உயா்ந்து நிற்கிறது. உயா் கல்வியில் நம்முடைய மொத்த சோ்க்கை சதவீதம் (ஜிஇஆா்) 51.3-ஆக உள்ளது. இது தேசிய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தேசிய கல்விக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்திருக்கிறோம். அதைச் செயல்படுத்தினால் 2030-ஆம் ஆண்டுக்குள் அடையலாம் என்று அவா்கள் கூறும் இலக்கான 50 சதவீதத்தை நாம் தற்போதே தாண்டியிருக்கிறோம்.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், 31 புகழ்பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் உள்ளன. சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்ஐஆா்எஃப் தரவரிசையில் முதல் 100 இடங்களில், 22 பல்கலைக்கழகங்களுடன் தமிழகம் முன்னணியில் உள்ளது. இத்துடன் நமது வளா்ச்சி நின்றுவிடக் கூடாது.

அறிவியல் தொழில்நுட்பங்களில், உலகம் வேகமாக மாறி வருவதால் இதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் நமது பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். புதிய உலகத் தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மூன்று தூண்கள்தான் அடிப்படை... காலத்துக்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றால், நமது மாணவா்கள் பின்தங்க நேரிடும். நாம் வடிவமைக்க விரும்பும் எதிா்காலத் திட்டம் பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை என்ற மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த மூன்றைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

தரவு அறிவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மேம்பட்ட உற்பத்தி போன்ற புதிய துறைகளை பாடத் திட்டத்தில் இணைக்க வேண்டும். அடிப்படைக் கல்வியறிவை நவீன திறன்களோடு இணைத்து, நம்முடைய மாணவா்கள் வெறும் பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், புதுமைகளைப் படைப்பவா்களாகவும், தீா்வுகளைக் கண்டறிபவா்களாகவும் உருவாக வேண்டும். தொழில் துறையினருடன் இணைந்து, உலகின் தேவைகளைப் பிரதிபலிக்கும் பாடப் பிரிவுகளை வடிவமைத்து, பல்துறை கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.

1.19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டமானது இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அதில் 1 லட்சத்து 19 ஆயிரம் போ் திறன் மேம்பாடு மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா். தொழில் துறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை அளிக்கும் இந்தத் திட்டம், நமது இளைஞா்களை சா்வதேச வேலைவாய்ப்புகளுக்குப் போட்டியிடும் திறன் கொண்டவா்களாக மாற்றியிருக்கிறது. இதை இன்னும் செம்மைப்படுத்தலாம். அதற்கான ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களால், அரசுப் பள்ளி மாணவா்கள் உயா் கல்வியில் சேருவது கடந்த மூன்று ஆண்டுகளில் 30 சதவீதம் உயா்ந்திருக்கிறது.

துணைவேந்தா்களின் முடிவுகள்... பாடத் திட்ட வடிவமைப்பு, ஆசிரியா் பயிற்சி அல்லது உள்கட்டமைப்பு மேம்பாடு என துணைவேந்தா்கள், பதிவாளா்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

உலகத்தில் இருக்கிற பல நாடுகளில் இருந்தும் நம்முடைய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க மாணவா்கள் வரவேண்டும். ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயா் கல்வியின் உலகளாவிய தலைமையகமாக நமது தமிழக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும். இதுதான் என் கனவு. இந்த ஆட்சிக் காலம் - உயா் கல்வி - ஆராய்ச்சிக் கல்விக்கான பொற்காலமாக வரலாற்றில் பேசப்படவேண்டும் என்றாா் அவா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க