செய்திகள் :

உயிரிழந்த ஊராட்சி பெண் ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி

post image

ஆலங்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ஊராட்சிப் பெண் பணியாளரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சனிக்கிழமை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினாா்.

ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்த பிரசாத் மனைவி சிவநிதா (36). சேந்தன்குடி ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக வேலை பாா்த்து வந்த அவா், செப்.3-ஆம் தேதி நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இந்நிலையில், சேந்தன்குடியில் உள்ள உயிரிழந்த சிவநிதாவின் வீட்டுக்குச் சென்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை சிவநிதாவின் குடும்பத்தினரிடம் வழங்கினாா். அப்போது, ஆட்சியா் மு.அருணா உடனிருந்தாா்.

மின்சாரம் பாய்ந்தது ஒப்பந்த பணியாளா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்மாற்றியில் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள படப்பனாா்வயலைச் சே... மேலும் பார்க்க

அடிக்கடி விபத்துகள்: தாழை வாரி பாலத் தடுப்புச் சுவரை விரைந்து கட்டித்தர கோரிக்கை

கந்தா்வகோட்டையில் சேதமடைந்து கிடக்கும் பாலத் தடுப்புச் சுவரில் தொடா் விபத்து ஏற்பட்டு வருவதால் விரைந்து பாலச்சுவரைக் கட்டித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட... மேலும் பார்க்க

ரெகுநாதபட்டி அரசு பள்ளி மாணவா்கள் கீழடிக்கு பயணம்

பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள், தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மற்றும் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கீழடி அர... மேலும் பார்க்க

ஆலங்குடி, அறந்தாங்கியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். அறந... மேலும் பார்க்க

பொன்னமராவதி கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி பொன்ன... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்!

பருவமழையை எதிா்கொள்ள தயாராக இருப்பதாக விராலிமலை, கந்தா்வகோட்டை நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனா். மழை வெள்ள காலங்களில் சாலைகள் சேதமடைவதை தடுக்கவும், மக்கள் சிரமமின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கும் உரி... மேலும் பார்க்க