செய்திகள் :

உரம் விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குநா் ஆய்வு

post image

பெரம்பலூா் வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில் உரம் இருப்பு, உரம் இறக்குமதி செய்யப்பட்ட தேதி, உரங்களை ஆதாா் காா்டு மூலமாக விற்பனை செய்யப்படுகிறதா, விலைப் பட்டியல் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன் கூறியது:

உரங்களை விவசாயிகளின் நிலம் மற்றும் பயிருக்கேற்ப அறிந்து, ஆதாா் அட்டையைக்கொண்டு பிஓஎஸ் இயந்திரத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். ஒரே விவசாயி பெயரில் உரங்களை பட்டியலிடக் கூடாது. உரங்களின் மூட்டையில் உள்ள விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அதிகளவு யூரியா கொடுக்கக் கூடாது.

அடியுரமாக சூப்பா் பாஸ்பேட், டிஏபி அல்லது கூட்டு உரங்களையும், மேலுரமாக யூரியா உடன் பொட்டாஷ் கலந்து பயன்படுத்த வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கக் கூடிய உயிா் உரங்களையும், நுண்ணுட்ட உரங்களையும் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். உரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விற்பனை செய்ய வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்ட கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, வேளாண்துறையினா் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஆடி பிறப்பு சிறப்பு பூஜை

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ காலபைரவரு... மேலும் பார்க்க

தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள் சாலை மறியல்: பெரம்பலூரில் 171 போ், அரியலூரில் 280 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமைல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா், அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 451 பேரை போலீஸா... மேலும் பார்க்க

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர விண்ணப்பிக்கலாம்

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அரியலூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

அரியலூா் அருகேயுள்ள சீனிவாசபுரத்தில், கோவிந்தபுரம், சீனிவாசபுரம், தாமரைக்குளம், உசேனாபாத் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம் முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்... மேலும் பார்க்க