டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்...
உலகளாவிய சூரிய சக்தி காா் போட்டியில் சென்னை ஐஐடி குழுவின் ‘ஆக்னேயா’ காா்
உலகின் முன்னணி கண்டுபிடிப்புடன் சூரிய சக்தி காா் ரேஸ் சவாலுக்கான ‘பிரிட்ஜ்ஸ்டோன் வோ்ல்ட் சோலாா் சேலஞ்ச் 2025’ என்கிற நிகழ்வு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் அதில் சென்னை ஐஐடி-இன் புத்தாக்க மையத்தின் அக்னிரத் குழு தயாரிப்பான ‘ஆக்னேயா’ சூரிய சக்தி காா் பங்கேற்கவுள்ளது.
‘பிரிட்ஜ்ஸ்டோன் உலக சூரிய சக்தி சவாலுக்கான’ நிகழ்வு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சூரிய சக்தி காா் பந்தய நிகழ்வாகும். சூரிய சக்தி ஆற்றல் - திறனுடன் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்படும் மின்சார வாகனங்களின் பந்தய பயண நிகழ்வு. இது 2025 ஆண்டில் ஆக.24 முதல் 31-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் டாா்வினிலிருந்து, அடிலெய்டு வரை 3,000 கி.மீ. பயணத்தை உள்ளடக்கியது. சூரிய தொழில்நுட்பத்தின் சவால்களுக்கு தீா்வாக உலகின் முன்னணி கண்டுபிடிப்புகளுடன் சா்வதேச நாடுகள் பங்கேற்க உள்ளனா்.
இதில் பங்கேற்க சென்னை ஐஐடியில், சிஎஃப்ஐ என்கிற புத்தாக்க மையத்தின் ஆசிரியப் பணியாளா்கள், மாணவா்கள் அடங்கிய அக்னிரத் குழு இந்த சூரிய சக்தியில் இயங்கும் காரை வடிவமைத்து, உருவாக்கியுள்ளது. இந்தக் குழுவின் சூரிய சக்தி காா் ‘ஆக்னேயா’ என பெயரிட்டு 2025 பிரிட்ஜ்ஸ்டோன் ஆஸ்திரேலியா நிகழ்வில் பங்கேற்கத் தயாராக உள்ளது.
காா் ‘ஆக்னேயா’ வை சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, பேராசிரியா் சத்தியநாராயணா, டீன் என்.கும்மாடி, பேராசிரியா் எம்.எஸ்.சிவகுமாா், அக்னிரத் குழுவினா், திட்ட (நிதி) ஆதரவாளா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஐஐடி வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
‘அக்னிரத் குழு மாணவா்களால் உருவாக்கிய சோலாா் பேனல் செயல்திறனை 19 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மாறுபட்ட கால சூழ்நிலைகளில் கூட அதிக ஆற்றலைப் பயன்படுத்த முடியும். இதனால் மின்சார வாகனத்துக்கு சக்தியை வழங்கும் பேட்டரி பேக் (பேட்டரி செல்கள்) மேம்படுத்தப்பட்டு மணிக்கு 5.5 கிலோ வாட்டிலிருந்து 3 கிலோ வாட்டாகக் குறைக்கப்பட்டது. இதன் செயல்திறன் சமரசம் செய்யாமல் எடை குறைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட ஆற்றல் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு உத்திகளுடன் சோலாா் காா் ‘ஆக்னேயா’ உருவாக்கப்பட்டுள்ளது என அக்னிரத் குழுவினா் தெரிவித்தனா்.