செய்திகள் :

உலகளாவிய வளர்ச்சியில் அமெரிக்கா 11% பங்களிப்பு; ஆனால் இந்தியா 18%!

post image

பெட்ரோலிய விலைகளின் கொள்முதல் விலை, சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்வர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மீதான வரிவிதிப்பு பிரச்னைகளுக்கிடையே, இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்தார். டிரம்ப்பின் இந்த விமர்சனம், இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.

இறந்த பொருளாதாரம் என்று டிரம்ப் கூறும் இந்தியாதான், உலகளாவிய வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு தருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுடன் சஞ்சய் பேசுகையில், உலகளாவிய வளர்ச்சியில் 3 சதவிகித வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தாலும், இந்தியா 6.5 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா 18 சதவிகித பங்களிப்பைத் தருகிறது. இது அமெரிக்காவைவிட அதிகமாகும். அமெரிக்கா சுமார் 11 சதவிகிதம்வரையில் பங்களிக்கிறது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ரஷிய எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து இந்திய நிறுவனங்கள் விலகிச் சென்றாலும், அதனால் உள்நாட்டு பணவீக்கத்தில் எந்தத் தாக்கமும் இருக்காது.

இந்த நிதியாண்டில், பெட்ரோலிய விலைகளின் கொள்முதல் விலையானது, சாமானிய மக்களை பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். எண்ணெய் விலை உயர்ந்தால், வரிகளில் குறைப்பு ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

RBI Governor says India doing well, contributing more to global growth than US

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

புது தில்லி: அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுவதாக உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறையால் நடத்தப்பட... மேலும் பார்க்க

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில், பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீ... மேலும் பார்க்க

சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!

ஒடிசாவில் கஜபதி மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக ஒருவரைக் கிராமத்தினர் அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 28ஆம் தேதி இரவு மாவட்டத்தில் உள்ள மோகனா காவல் எல்லைக்குள்பட்ட க... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

கர்நாடக மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில், முறைகேடாக சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை கையெழுத்திட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் இணைத்து பகிருமாறு கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி... மேலும் பார்க்க

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்... மேலும் பார்க்க

பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்க... மேலும் பார்க்க