உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
கடந்த இரண்டு ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த Aescape என்ற நிறுவனம், உலகின் முதல் AI இயங்கும் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
AI மசாஜ்
Aescape நிறுவனத்தின் நிறுவனர் எரிக் லிட்மேன், அறுவை சிகிச்சை ரோபோக்களை ஒத்த ரோபோக்களைப் பயன்படுத்தி AI மசாஜ் சேவையை வழங்குகிறார்.

மசாஜ் தொடங்குவதற்கு முன், வாடிக்கையாளர்கள் Aescape வழங்கும் சிறப்பு உடையை அணிய வேண்டும். இந்த உடை, ரோபோ கைகள் உடலில் தடையின்றி இயங்க உதவுகிறது.
ஏஐ ரோபோ, சென்சார்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளரின் உடலுக்கு மசாஜ்களை வழங்குகிறது. இதன் மூலம் மசாஜ் நுட்பங்களை சரியான அழுத்தம் மற்றும் வெப்பநிலையுடன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மனித தொடுதலுடன் கூடிய மசாஜைப் போலவே இருக்கும் என்று அந்நிறுவனர் கூறியிருக்கிறார்.
Aescape நிறுவனம் இதற்காக பல டாலர்கள் செலவழித்து, சந்தையில் ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.