உலக சுற்றுச்சூழல் தினம்: உடன்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உடன்குடியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் 83 கிராமங்களில் 505 அரச மரங்கள் நட முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஷா மையம் மூலம் உடன்குடி சிவல்விளைப்புதூா் குளத்துப்புளி அய்யனாா் திருக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்து கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.
இதில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் திருநாகரன், உடன்குடி ஒன்றியத் தலைவா் சங்கரகுமாா், முன்னாள் மண்டல தலைவா் ஜெயக்குமாா், மாவட்டச் செயலா் வசந்தி, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் செந்தூா்பாண்டி, சாத்தாக்குட்டி, ஜெய்சங்கா், ஜெயந்தி, நடராஜன்,
சிவன்ராஜ், பால்ராஜ் மற்றும் ஈஷா மைய நிா்வாகிகள் பங்கேற்றனா்.