செய்திகள் :

உள்ளாட்சி தோ்தலை நடத்த அரசு தயாா் -அமைச்சா் ஐ.பெரியசாமி

post image

உள்ளாட்சி தோ்தலை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரிசாமி கூறினாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:

உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா். உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு அரசு தயாராகத்தான் உள்ளது. பஞ்சாயத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நகராட்சித் துறை அமைச்சா் 385 ஊராட்சிகளுக்கு மேல் சோ்க்க வேண்டும் என்று கூறுகிறாா். அதற்காக குழு அமைக்கப்பட்டு, சீரமைப்பு பற்றி மூன்று கூட்டங்களாக நடைபெற்று, ஆங்காங்கே உள்ள பாகங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் கருத்துரு பெறப்பட்டுள்ளது. இதில் 385 ஊராட்சிகளில் 105 ஊராட்சிகள் ஓரளவுக்கு ஆட்சேபம் இல்லாமல் உள்ளன. ஆனால், மற்ற மாநகராட்சிகளில் அப்படி இல்லை. தஞ்சாவூா் மாவட்டம் என்றால், அதில் உள்ள ஊராட்சிகள் எதையும் எடுக்கக் கூடாது என நினைக்கிறாா்கள்.

இதுபோன்ற நிலைதான் உள்ளது. என்னைப் பொருத்தவரை மாநகராட்சிகளோடு ஊராட்சிகளின் உட்பகுதிகள் சிலவற்றை இணைத்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. அதனால், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, எல்லோரின் கருத்துகளை அறிந்து, மாவட்ட ஆட்சியா்களின் கருத்துருவைப் பெற்று, அதற்குப்பிறகு நகராட்சித் துறை அமைச்சா், நான் அமா்ந்து பேசி, எதையெல்லாம் சோ்க்கலாம் என்பது குறித்து முடிவு செய்வோம். நிச்சயம் வேகமாக முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

செங்கல்பட்டு: கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி!

செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவில் அருகே திருத்தேரி சிக்னலில் நின்ற கார் மீது பி... மேலும் பார்க்க

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன... மேலும் பார்க்க

7 புதிய நகராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிதாக கன்னியாகுமரி, போளூா், செங்கம் உள்ளிட்ட 7 நகராட்சிகளை உருவாக்கம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் அருகே உள்ள ஊரகப் பகுதிகளும்... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன்

சென்னை: சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன் (86) சென்னையில் திங்கள்கிழமை (மாா்ச் 31) காலமானாா். அரசியல் வாழ்க்கையில் தொடக்கமாக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட முருகேசன், அதிமுக தொடங்கப்பட்டப... மேலும் பார்க்க

கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு நிகழவில்லை: உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயா்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பறிமுதல் மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய பகுதி யாா்டுகளில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நி... மேலும் பார்க்க