செய்திகள் :

உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்!

post image

உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே கடந்த செப். 10 முதல் தென்மாவட்ட ரயில்கள் சில எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (12654/ 12653), எழும்பூர் - ராமேஸ்வரம் சேது (22661/ 22662), எழும்பூர் - ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படுகின்றன. அதேபோல அங்கிருந்து திரும்பும் ரயில்கள் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் (22675) ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. ஆனால் திருச்சியில் இருந்து திரும்பும் ரயில் எழும்பூர் வரை செல்கிறது.

எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638) எழும்பூரில் இருந்து புறப்படுகிறது. ஆனால் மதுரையில் இருந்து திரும்பும் ரயில் தாம்பரத்திலேயே நிறுத்தப்படுகிறது.

புதிய அறிவிப்பு

இதன் தொடர்ச்சியாக உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர் - தஞ்சாவூர் இடையிலான 'உழவன் எக்ஸ்பிரஸ்' மற்றும் எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் 'அனந்தபுரி எக்ஸ்பிரஸ்' ரயில்கள் வருகிற செப். 17 ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும், அதேபோல அங்கிருந்து சென்னைக்கு திரும்பும் ரயில்கள் தம்பரத்திலேயே நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Uzhavan Express (Chennai-Thanjavur) and Ananthapuri Express (Chennai-Kollam) trains will temporarily depart from Tambaram railway station from Sep 17

வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? மாநில மனித உரிமை ஆணையம்

நெல்லை: வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு நீதி, கிராம மக்களுக்கு ஒரு நீதியா? என மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அடிப்படை வசத... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலைய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (11-09-2025) தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கார... மேலும் பார்க்க

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று(செப். 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்... மேலும் பார்க்க

செப். 16ல் சென்னையில் பாஜகவின் முக்கிய ஆலோசனை கூட்டம்!

சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் வருகிற செப். 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈ... மேலும் பார்க்க

உங்க விஜய் நா வரேன்! சுற்றுப் பயணத்துக்கான தவெக லோகோ வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் அக்கட்சி வெளியிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணம், திருச்சி... மேலும் பார்க்க

சுரங்கம் தோண்ட பொதுமக்கள் கருத்து தேவையில்லை! மத்திய அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

டங்க்ஸ்டன் மற்றும் அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க