செய்திகள் :

‘உழவரை தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம்

post image

அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள 22 வருவாய் கிராமங்களில் வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட உழவரைத் தேடி வேளாண்மை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம் தலைமை வகித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா்.

தொடா்ந்து அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா விவசாயிகளுக்கு திட்ட விளக்கவுரையாற்றினாா்.

இதில், வேளாண் பொறியியல் துறை, கால்நடை துறை வேளாண் கூட்டுறவு சங்கம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டு துறை சாா்ந்த திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வழங்கப்பட்டது. மேலும், தோட்டக்கலை சாா்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் மறியல்

கரூரில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு இறந்த இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், நாசுவம்பாளையத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கனகரா... மேலும் பார்க்க

கரூரில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியோா் கைது!

கரூரில் இரு இடங்களில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 10 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூா் ராமானுஜம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆயுதங்களுடன் சில இளை... மேலும் பார்க்க

கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 5,566 வழக்குகளில் தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5.566 வழக்குகளுக்கு ரூ. 9.91 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய தேச... மேலும் பார்க்க

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்க... மேலும் பார்க்க

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க