செய்திகள் :

உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் மார்னஸ் லபுஷேன்!

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் உஸ்மான் கவாஜாவுடன் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) முதல் லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஈடுபட்டுள்ளன.

இதையும் படிக்க: ஸ்டீவ் ஸ்மித் - ககிசோ ரபாடா இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும்: ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறக்கப்படுவார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதையடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு இதுவரை சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் அமையவில்லை என்றே கூறலாம். ஸ்டீவ் ஸ்மித், சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்பட்டார்கள். இருப்பினும், இவர்களில் யாரும் டேவிட் வார்னரின் இடத்தை நிரப்பியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நினைக்கவில்லை.

இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேனுக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்து அணியில் இணைந்துள்ள கேமரூன் கிரீன் 3-வது வீரராக களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் 6-வது வீரராக களமிறக்கப்படவுள்ளார்.

இதையும் படிக்க: டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் ஆஸி. சாம்பியன் பட்டம் வெல்லும்: முன்னாள் இந்திய வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை லபுஷேன் சரியாக பயன்படுத்திக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க