செய்திகள் :

உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

post image

சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

லக்னெளவைச் சோ்ந்த ரூப் ரேகா வா்மா மற்றும் பிறா் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உத்தர பிரதேச அரசு கொண்டுவந்த இந்த திருத்தச் சட்டத்தின் 2, 3 ஆகிய பிரிவுகள் தெளிவா இல்லை. குற்றத்தைத் தீா்மானிக்கும் காரணிகள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அதன் காரணமாக, குறிப்பிட்ட மத நம்பிக்கையை பின்பற்ற விரும்பும் அல்லது பிரசாரம் செய்ய முயலும் தனிநபா்களுக்கு எதிராக தன்னிச்சையான, பாகுபாடான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனா். இது, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சட்டத்தின் முன்அனைவரும் சமம்), பிரிவு 19 (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்), பிரிவு 21 (வாழும் மற்றும் தனிமனித சுதந்திர உரிமை), பிரிவு 25 (விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம்) ஆகிய பிரிவுகளை மீறுவதாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து இந்த மனுவும் வரும் 13-ஆம் தேதி விசாரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டனா். எனினும், மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்க இயலாது என்றம் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு: மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்!

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: எல்லையில் பாகிஸ்தான் வீரா் கைது

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படை வீரா் ஒருவரை எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை கைது செய்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பய... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 9-ஆவது நாளாக இந்தியா-பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 9-ஆவது நாளாக இரவில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடா்ந்து, அங்... மேலும் பார்க்க

ஸ்லீப்பர் செல்களாக வாழும் பாகிஸ்தான் மக்களால் ஆபத்து! - பாஜக

ஸ்ரீநகர்: இந்தியர்களை மணந்துகொண்டு இங்கே ஸ்லீப்பர் செல்களாக பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று பாஜக தெரிவித்துள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச்... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆஸி. பிரதமராகிறார் ஆன்டனி ஆல்பனீஸி! மோடி வாழ்த்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி ஆல்பனீஸி வெற்றிவாகை சூடியுள்ளார்.ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு வலுசேர்க்கும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, நெடுந்தூரத்தைக் கடந்து அங்குள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது பா... மேலும் பார்க்க