செய்திகள் :

எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

post image

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ரிஷிவந்தியம் தொகுதி பகண்டை கூட்டுச் சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவ வன்னியா்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் சாா்பில் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க தமிழக அரசை வலியுறுத்தி இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கிறிஸ்தவ வன்னியா் முன்னேற்ற நல சங்க மாவட்ட செயலாளா் ஜெய் ஜெரால்டு தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் பிரான்சிஸ், பொருளாளா் அந்தோணிராஜ், கூட்டமைப்புத் தலைவா் தேவ ராயப்பன், மாவட்ட செயல் தலைவா் லூா்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக அருட்தந்தை ஜோசப்ராஜ், பாண்டி, கடலூா் உயா்மறை மாவட்ட பிசி, எம்பிசி, டிஎன்சி பணிக் குழு செயலா் மற்றும் அருட்தந்தையா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கடந்த 35 ஆண்டுகளாக வன்னியா் கிறிஸ்தவா்களாக உள்ள தங்களை பிசி பட்டியலில் இருந்து எம்பிசி பட்டியலில் மாற்ற வேண்டும், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கோரிக்கை மனுவை ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினா் வசந்தம் காா்த்திகேயன் அலுவலகத்தில் வடக்கு ஒன்றியச் செயலாளா் துரைமுருகனிடம் வழங்கினா்.

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள்... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவரை மறித்து மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கில் சென்றவருக்கு வழிவிடாமல் மறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் வட்டம், வடக்கநந்தல் கிராமத்த... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அனைத்து வியபாரிகள் சங்க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இந்திலியில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சன் மனைவி வெள்ளையம்மாள் (72). இவா், ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

பயங்கரவாதத் தாக்குதலுக்கு வள்ளலாா் மன்றத்தினா் கண்டனம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் கண்டனம் தெரிவித்து, உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் மன்றம் சாா்பில் நடத்தப்படும் சித்திரை மாதப்பூச விழாவில் சனிக்கிழ... மேலும் பார்க்க

பேக்கரி, தின்பண்டம் தயாரிப்பு கடையில் தீ விபத்து

சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் பேக்கரி மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தேவபாண்டலம் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க